News October 15, 2025
திருவள்ளூரில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்தர் சுக்லா உத்தரவின் பேரில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. ஹரிக்குமார் தலைமையில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் இன்று (15.10.2025) திருவள்ளூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. பொதுமக்களின் குறைகள் கேட்டு உடனடி தீர்வுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
Similar News
News October 16, 2025
திருவள்ளூர்: இரவு ரோந்து போலீசார் விவரங்கள் வெளியீடு

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
News October 15, 2025
திருவள்ளூரில் இலவச மருத்துவ முகாம்கள்

திருவள்ளூர் மாவட்டத்தில் காய்ச்சல் மற்றும் மழைக்கால நோய்த்தடுப்பு நடவடிக்கையின் பகுதியாக இலவச சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்று வருகின்றனர். நாளை (அக்.16) மாவட்ட மருத்துவ அலுவலர் தலைமையில் நடத்தப்படும். இம்முகாம் நடக்கும் பகுதிகள் மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.
News October 15, 2025
திருவள்ளூர்: லஞ்ச ஒழிப்புத்துறை திடீரென ரெய்டு

திருவள்ளூர் மாவட்டத்தில் மோட்டார் வாகன ஆய்வாளராக பணியாற்றி வருபவர் லோகநாதன். இவரது வீடு காஞ்சிபுரத்தில் செவிலிமேடு பகுதியில் உள்ளது. அண்மையில் திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஆய்வு செய்ததில் ரூ.1.24 பணத்தை கைப்பற்றியிருந்தனர். இந்நிலையில் தற்போது காஞ்சி மாவட்ட லஞ்ச ஒழிப்புதுறையின் உத்தரவின் பேரில் லோகநாதன் வீட்டில் சோதனை மேற்கண்ட போது கணக்கில் வராத ரூ.84,000 பணத்தைபறிமுதல் செய்தனர்.