News October 15, 2025

BREAKING: தவெக நிர்வாகிகளுக்கு ஜாமின்

image

கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் நிர்வாகி பவுன்ராஜ் ஆகியோருக்கு கரூர் குற்றவியல் நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது. இருவரும் கடந்த 30-ம் தேதி கைது செய்யப்பட்ட நிலையில், திருச்சி மத்திய சிறையில் உள்ளனர். இதில், மதியழகனை, நீதிமன்ற அனுமதி பெற்று SIT குழு 2 நாள்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Similar News

News October 16, 2025

கிருஷ்ணகிரி: இரவு ரோந்து பணி விவரம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று (15.10.2025) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம். வீட்டில் தனியாக வசிக்கும் பெண்கள் மற்றும் முதியவர்கள் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்ணை தொடர்பு கொள்ளலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

News October 16, 2025

WTO-வில் இந்தியா மீது புகார் செய்த சீனா

image

மின்சார வாகனங்கள் மற்றும் பேட்டரி உற்பத்திக்கு இந்தியா வழங்கும் மானியங்கள், உலக வர்த்தக விதிகளுக்கு எதிரானது என சீனா, WTO-வில் புகார் அளித்துள்ளது. இந்தியாவின் மானியங்கள் உள்நாட்டு தயாரிப்புகளை ஊக்குவித்து, சீன நிறுவனங்களுக்கு நியாயமற்ற போட்டியை உருவாக்குவதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது. இந்த உதவிகளை நிறுத்த கோரிக்கை விடுத்துள்ள சீனா, பிரச்சினை குறித்து ஆலோசனை நடத்த அழைப்பு விடுத்துள்ளது.

News October 16, 2025

இந்தி திணிப்புக்கு தடையா? TN FACTCHECK விளக்கம்

image

தமிழ்நாட்டில் கட்டாய இந்தி திணிப்பை தடுக்க, தமிழக அரசு சட்டப்பேரவையில் மசோதா தாக்கல் செய்யப் போவதாக காலையில் <<18012166>>ஒரு தகவல்<<>> வெளியானது. இந்தி பேனர்கள், விளம்பர பலகைகள், திரைப்படங்கள் மற்றும் பாடல்களுக்கு தடைவிதிக்கப் போவதாகவும் அதில் குறிப்பிட்டிருந்தது. ஆனால், அது முற்றிலும் பொய்யான செய்தி, அப்படியான திட்டம் எதுவும் தமிழக அரசுக்கு இல்லை என TN FACTCHECK தெரிவித்துள்ளது.

error: Content is protected !!