News October 15, 2025

தண்ணீர் குடிக்காவிட்டால் தலைவலி ஏற்படுமா?

image

அன்றாடம் போதுமான அளவு தண்ணீர் குடிக்க தவறினால் நமக்கு தலைவலி ஏற்படும் என்பது உண்மையா? ஆம். நம் உடலில் நீரிழப்பு ஏற்பட்டால் தலைவலி ஏற்படும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். இதனால் மூளை சுருங்குவதோடு, நரம்புகளில் அழுத்தம் உண்டாகி சோர்வு, தலைச்சுற்றல் மற்றும் குமட்டல் ஏற்படும். எனவே, அன்றாடம் சராசரியாக 3 லிட்டர் தண்ணீர் மற்றும் ஜூஸ் உள்ளிட்ட நீர்ச்சத்து நிறைந்த பானங்களை அருந்தலாம்.

Similar News

News October 17, 2025

கைது செய்யப்பட்ட 2-வது நாளே சிறையில் மர்ம மரணம்!

image

திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த வரிச்சியூர் செல்வத்தின் கூட்டாளி வர்க்கீஸ் உயிரிழந்தார். இவர், கடந்த 2012-ல் மதுரை திமுக பிரமுகர் கதிரவனை கடத்தி பணம் பறித்த வழக்கில், நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட 2-வது நாளே உயிரிழந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உறவினர்கள், ஆதரவாளர்கள் குவிந்து வருவதால் சிறைச்சாலை பகுதியில் பதற்றமாக சூழல் நிலவுகிறது.

News October 17, 2025

மழையில் இந்த 5 பொருள்களை ரெடியா வெச்சிக்கோங்க!

image

மழை சீசனில் நாம் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அவசியமானதாகும். இந்த பொருள்கள், மழைக்காலத்தில் ஏற்படக்கூடிய சில அசாதாரண சூழ்நிலைகளை எதிர்கொள்ள உதவும். அப்படி மழையின் போது நாம் ரெடியாக வைத்திருக்க வேண்டிய 5 பொருள்களை மேலே படங்களாக கொடுத்துள்ளோம். அவை என்னென்ன என போட்டோவை வலது பக்கம் Swipe பண்ணி பார்க்கவும். இப்பதிவை அனைவருக்கும் பகிரவும்.

News October 17, 2025

171 நாள்களுக்கு பிறகு EPS தான் முதல்வர்: நயினார்

image

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிப்பதாகவும், போக்குவரத்து ஊழியர்கள், பகுதி நேர ஆசிரியர்கள், செவிலியர்கள் என யார் கோரிக்கைகளையும் திமுக அரசு நிறைவேற்றவில்லை எனவும் நயினார் விமர்சித்துள்ளார். சென்னையில் பேசிய அவர், திமுக ஆட்சியின் முடிவு நாளை மக்கள் எண்ணிக் கொண்டு இருப்பதாக தெரிவித்தார். மேலும், 171 நாள்களுக்குப் பிறகு நம்ம(NDA) ஆட்சி மலரும் எனவும், EPS முதல்வராவார் என்றும் சூளுரைத்தார்.

error: Content is protected !!