News October 15, 2025

தூய்மை காவலர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கிய மாவட்ட ஆட்சியர்!

image

நீலகிரி மாவட்டம், உதகை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு 268 தூய்மை காவலர்களுக்கு தீபாவளி பரிசு தொகுப்புகள் வழங்கும் அடையாளமாக இன்று 54 தூய்மை காவலர்களுக்கு தீபாவளி பரிசு தொகுப்பு மற்றும் ஊக்கத்தொகையாக ரூ.1,000/- வழங்கினார். இதில் உதகை வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Similar News

News October 17, 2025

மேட்டுப்பாளையம் ஊட்டி சிறப்பு மலை ரயில் சேவை அறிவிப்பு

image

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு மலை ரயில் சேவையை தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் அறிவித்துள்ளது. அதன்படி மேட்டுப்பாளையம் – ஊட்டி இடையே நாளை முதல் 17, 19 ஆகிய தேதிகளில் மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 9.10 மணிக்கு புறப்பட்டு மதியம் 2.25 மணிக்கு ஊட்டி வந்தடையும். மறு மார்க்கத்தில் 18, 20 ஆகிய தேதிகளில் ஊட்டியில் இருந்து காலை 11.25 மணிக்கு புறப்பட்டு மாலை 4.20 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்றடையும்.

News October 17, 2025

நீலகிரி மாவட்டத்தில் காவல்துறை இரவு ரோந்து விவரங்கள்

image

நீலகிரி மாவட்டத்தில் உதகை நகரம் , உதகை ஊரகம் உட்கோட்டம் , குன்னூர் உட்கோட்டம் , கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் பகுதிகளில் இன்று இரவு   காவல்துறை ரோந்து மேற்கொள்ளப்படுகிறது . அதில் இடம்பெற்றுள்ள  DSP , ஆய்வாளர்கள் , சப் இன்ஸ்பெக்டர்கள் ஆகியோர் மொபைல் எண்கள் இடம் பெற்றுள்ளது . மேலும்  மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 0423 2444111 மற்றும் அவசர உதவிக்கு 100 அறிவிக்கப்பட்டுள்ளது.

News October 16, 2025

நீலகிரி: கோயில்களில் பிரச்சனையா? இதை பண்ணுங்க!

image

தமிழகத்தில் உள்ள இந்து சமயத்தை சேர்ந்த பல்வேறு கோயில்களை தமிழ்நாடு அரசு சார்பில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நிர்வாகம் செய்யப்பட்டு வருகின்றது. இக்கோயில்களில் சாமி தரிசன கட்டண வசூல், அன்னதானம், பராமரிப்பு குறைபாடு, தாய்மார்கள் பாலூட்டும் அறை, குடிநீர் வசதி மற்றும் கழிப்பறை போன்ற அடிப்படை தேவை குறித்த புகார் மற்றும் கோரிக்கையை <>இங்கு கிளிக் <<>>செய்து பதிவு செய்யலாம். இதை அதிகம் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!