News October 15, 2025
சேலம் எஸ்.பி அலுவலகத்தில் சிறப்பு விசாரணை முகாம்!

சேலம் மாவட்ட காவல்துறை சார்பில், பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீதான சிறப்பு விசாரணை முகாம், இன்று சேலம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விசாரணை முகாமில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கௌதம் கோயல் பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது சிறப்பு விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு, மனு மீது உடனடி விசாரணை செய்ய உத்தரவிட்டார். இந்த முகாமில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.
Similar News
News December 7, 2025
சேலம்: INTERVIEW இல்லாமல் மத்திய அரசு வேலை!

சேலம் மக்களே, India Post Payments Bank-ல் ஜூனியர் ஆசோசியட், அசிஸ்டண்ட் மேனேஜர் உள்ளிட்ட பதவிகளில் மொத்தம் 309 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு, பட்டப்படிப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கு 20 முதல் 35 வயதுடையவர்கள், இங்கு <
News December 7, 2025
சேலம்: திருமண வாழ்வில் சோகம்!

சேலம் பச்சப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் நாகையன். இவருடைய மனைவி காந்திமதி (28), நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். போலீசார், காந்திமதியின் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.அதில் திருமணமாகி மூன்று ஆண்டுகளே ஆன நிலையில் கணவன் – மனைவி இடையே அடிக்கடி ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகச் காந்திமதி தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
News December 7, 2025
சேலம் வருகிறார் விஜய்? தவெக மாஸ்டர் பிளான்!

வரும் டிசம்பர் 9ஆம் தேதி புதுச்சேரியில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடத்த தமிழக வெற்றிக் கழகத்துக்கு அனுமதி கிடைத்துள்ள நிலையில், அதை முடித்தவுடன் சேலத்தில் பொதுக்கூட்டம் நடைபெறும் என தகவல். விரைவில் தேதியை குறிப்பிட்டு போலீசாரிடம் அனுமதி கடிதம் வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை சேலம் தவெகவினர் மேற்கொண்டு வருகின்றனர்.


