News October 15, 2025

தனிநபரை பலிகடா ஆக்குவது நோக்கம் அல்ல: CM ஸ்டாலின்

image

கரூரில் நிகழ்ந்த பெருந்துயரம் தொடர்பாக எந்த ஒரு தனிநபர் மீதும் பழி சுமத்திப் பலிகடா ஆக்குவது நமது நோக்கம் இல்லை என CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திட்டமிட்டு அரசு மீது பொய்களைச் சிலர் பரப்பும்போது, நடந்த உண்மையை விளக்க வேண்டியது அரசின் கடமை எனவும் கூறியுள்ளார். இதேபோல் இனி நடக்காமல் தடுக்க SC தீர்ப்பின் அடிப்படையில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை (SOP) அரசு வகுத்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Similar News

News October 15, 2025

17-ம் தேதி சபரிமலை கோயில் நடை திறப்பு

image

ஐப்பசி மாத பூஜைகளுக்காக வரும் 17-ம் தேதி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட உள்ளது. 22-ம் தேதி வரை கோயில் நடை திறந்திருக்கும். இதனிடையே வரும் 22-ம் தேதி ஜனாதிபதி திரெளபதி முர்மு சபரிமலை சென்று சுவாமியை தரிசிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 22-ம் தேதி ஆன்லைன் முன்பதிவுகள் முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

News October 15, 2025

ஐநாவில் தொடர்ந்து முக்கியத்துவம் பெறும் இந்தியா

image

ஐநா மனித உரிமைகள் கவுன்சிலுக்கு 7-வது முறையாக இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, 2026 முதல் 2028 வரை, 3 ஆண்டுகளுக்கு இந்தியா பணியாற்றும். மனித உரிமைகள் மற்றும் சுதந்திரம் ஆகியவற்றின் மீது இந்தியா கொண்டுள்ள ஈடுபாட்டை இது பிரதிபலிக்கிறது என இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி பி.ஹரீஷ் பதிவிட்டுள்ளார். மேலும், இக்குழுவில் பாகிஸ்தானும் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

News October 15, 2025

காதலித்து ஏமாற்றினால் நரகத்தில் என்ன தண்டனை?

image

‘அந்நியன்’ படம் பார்த்தவர்களுக்கு கருட புராணம் பற்றி சொல்ல தேவையில்லை. அந்த கருடபுராணத்தின் படி காதல் மற்றும் திருமணத்தில் ஏமாற்றினால் என்ன தண்டனை கொடுக்கப்படுகிறது தெரியுமா? ‘அநித்தாமிஸ்ர நரகம்’. இதில், கடும் இருளில் சிக்கி, பார்வை மங்கி, மூர்ச்சையாகி தவிப்பார்களாம். தவறான உறவுகளில் ஈடுபட்டால் ‘வஜ்ர கண்டக நரகம்’. அதாவது கூர்மையான மரங்களில் அமரவைத்து கழுவேற்றப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

error: Content is protected !!