News October 15, 2025

தமிழ்நாட்டில் இந்தி திணிப்புக்கு தடையா?

image

தமிழ்நாட்டில் கட்டாய இந்தி திணிப்பை தடுக்க மாநில அரசு சட்ட மசோதா தாக்கல் செய்யப் போவதாக ஆங்கில ஊடகத்தில் தகவல் வெளியாகியுள்ளது. நேற்றிரவு நடந்த அவசரக் கூட்டத்தில் இதுபற்றி CM ஸ்டாலின் விவாதித்ததாகவும் கூறப்படுகிறது. இந்தி விளம்பரப் பலகைகள், பதாகைகள், திரைப்படங்கள், பாடல்கள் போன்றவற்றுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க இந்த மசோதா வருகிறதாம். இதுபற்றி மேலும் தகவல் எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News

News October 15, 2025

சோதனையை சாதனையாக்கிய ஜாம்பவான்கள் PHOTOS

image

உங்களுடைய கடின உழைப்பை யார் நிராகரித்தாலும், அதைப்பற்றி கவலைப்படாமல் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருங்கள். ஏனெனில், உலகில் தொடக்கத்தில் நிராகரிக்கப்பட்ட பலரும், நாளடைவில் தொழில் ஜாம்பவான்களாக உருவெடுத்து இருக்கின்றனர். யார் அவர்கள்? மேலே உள்ள போட்டோஸை SWIPE செய்து பாருங்கள். SHARE IT.

News October 15, 2025

செல்போன் ரீசார்ஜ்.. அதிரடி ஆஃபர்

image

தீபாவளியை முன்னிட்டு ₹1 ரீசார்ஜ் திட்டத்தை BSNL அறிமுகப்படுத்தியுள்ளது. ₹1 ரீசார்ஜ் செய்தால் 30 நாள்கள் வேலிடிட்டியுடன் நாள் ஒன்றுக்கு 2GB டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ்கால், நாள் ஒன்றுக்கு 100 SMS-ம் அனுப்பலாம். அக்.15 முதல் நவ.15 வரை இலவசமாக சிம்கார்டை வாங்கி ஒரு ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் போதும் என BSNL தெரிவித்துள்ளது.

News October 15, 2025

BREAKING: தவெக நிர்வாகிகளுக்கு ஜாமின்

image

கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் நிர்வாகி பவுன்ராஜ் ஆகியோருக்கு கரூர் குற்றவியல் நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது. இருவரும் கடந்த 30-ம் தேதி கைது செய்யப்பட்ட நிலையில், திருச்சி மத்திய சிறையில் உள்ளனர். இதில், மதியழகனை, நீதிமன்ற அனுமதி பெற்று SIT குழு 2 நாள்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!