News October 15, 2025
தி.மலை: கேன் வாட்டர் குடிப்போர் கவனத்திற்கு

தி.மலை மாவட்டத்தில் கேன் தண்ணீர் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. கேன் தண்ணீர் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை. குடிநீர் கேன்களில், பிளாஸ்டிக் தரம், கேன்களின் சுத்தம், உற்பத்தி மற்றும் காலாவதி தேதி, BIS மற்றும் FSSAI முத்திரைகள் ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும். ஒரு கேனை 30 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கேன்களின் நிறம் மாறினால் பயன்படுத்த கூடாது. (SHARE பண்ணுங்க)
Similar News
News October 16, 2025
இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (15.10.2025) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News October 16, 2025
ஆரணி அரசு பொது மருத்துவமனையில் ஆட்சியர் தர்ப்பகராஜ் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. க. தர்ப்பகராஜ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (அக்.15) உங்களைத் தேடி உங்கள் ஊரில் நடைபெற்றது. திட்டத்தின் கீழ் ஆரணி அரசு பொது மருத்துவமனையில் ஆய்வு செய்தார். மருத்துவ சேவைகள், நோயாளிகளுக்கான வசதிகள், மருந்து வழங்கல் மற்றும் மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட அம்சங்களை ஆய்வு மேற்கொண்டார். மேலும், மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களுடன் கலந்துரையாடினார்.
News October 15, 2025
தி.மலை சார் பதிவாளர் அலுவலகத்தில் சோதனை

திருவண்ணாமலை வேட்டவலம் சாலையில் உள்ள சார் பதிவாளர் அலுவலகம் எண் 2-ல், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ஹேமமாலினி மற்றும் அருள்பிரசாத் தலைமையில் 10க்கும் மேற்பட்டோர் இன்று (அக்.15) அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சோதனையில் கணக்கில் வராத லட்சக்கணக்கான ரூபாய்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.