News April 16, 2024
சாலையோர மரத்தில் பைக் மோதி பெண் பலி

ஆரணியை சேர்ந்த கார்த்திகேயன்(54), நேற்றிரவு பைக்கில் தனது உறவினரான சசிகலா (37) என்பவருடன் ஸ்ரீபுரம் தங்க கோயிலில் சாமி தரிசனம் முடித்து விட்டு திரும்பினார். அப்போது கணியம்பாடி அருகே அடையாளம் தெரியாத வாகனம் அவர் ஓட்டி வந்த பைக் மீது உரசியதில், பைக் அருகில் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சசிகலா சம்பவ இடத்திலேயே பலியானார். தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News July 11, 2025
துயரம் நீங்கும் வில்வனாதேஸ்வரர்

வேலூரில் சுமார் 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திருவலம் ஸ்ரீ வில்வனாதேஸ்வரர் கோயில். இது தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்றாகும். இங்குள்ள சிவன் வில்வ இலைகளால் பூஜிக்கப்பட்டதால் வில்வனாதேஸ்வரர் என்று பெயர் பெற்றதாக ஐதீகம். இந்த கோயில் மன அமைதிக்கு ஒரு புகலிடமாக திகழ்கிறது. வாழ்க்கையில் தொடர்ந்து துயரங்களை சந்திப்பவர்கள் இங்கு வந்து மனமுருகி வேண்டினால் துயரம் நீங்கும் என்பது நம்பிக்கை. ஷேர்!
News July 11, 2025
குரூப் 4 தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு…

▶வேலூரில் நாளை (ஜூலை 12) குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது.
▶தேர்வு எழுத ஹால் டிக்கெட் (HALL TICKET) கட்டாயம்.
▶ஆதார், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை (ஏதேனும் ஒன்று) அவசியம்.
▶கருப்பு மை கொண்ட பேனா மட்டுமே அனுமதி.
▶காலை 9 மணிக்குள்ளேயே தேர்வறைக்குள் செல்ல வேண்டும்.
▶வாட்ச், மோதிரம், பெல்ட் அணிய கூடாது.
▶தேர்வு எழுதும் அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க
News July 11, 2025
ரூ.15 லட்சம் வரை விபத்து காப்பீடு 2/2

▶18-65 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த காப்பீடை பெறலாம்.
▶ஆப்ஷன் 1 – ரூ.5 லட்சம் காப்பீடுக்கு வருடம் ரூ.355 கட்டினால் போதும்.
▶ஆப்ஷன் 2 – ரூ.10 லட்சம் காப்பீடுக்கு வருடம் ரூ.555கட்டினால் போதும்.
▶ஆப்ஷன் 3- ரூ.15 லட்சம் காப்பீடுக்கு வருடம் ரூ.755 கட்டினால் போதும்.
▶இந்த <