News October 15, 2025

ராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று அக்டோபர் 15ஆம் தேதி இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இது குறித்து ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் அங்கு சென்று தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

Similar News

News October 17, 2025

ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (அக்-16) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர், பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News October 16, 2025

ராணிப்பேட்டையில் வேலைவாய்ப்பு முகாம்.. மிஸ் பண்ணிடாதீங்க!

image

ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. அதன்படி நாளை அக்.17ஆம் தேதி காலை 10.00 மணி முதல் 1.30 மணி வரை நடைபெற உள்ளது. இம்முகாமில் 10th,12th, டிப்ளமோ, ஐடிஐ முடித்தோர், மற்றும் பட்டதாரிகள் <>விண்ணப்பிக்கலாம்<<>>. மேலும் விபரங்களுக்கு 9488466468 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும். நண்பர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க

News October 16, 2025

சைபர் குற்றச்செயல்களுக்கு எச்சரிக்கை செய்த காவல்துறை

image

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு சைபர் குற்றச்செயல்களை தவிர்க்க எச்சரிக்கை விடுத்துள்ளது. அறியப்படாத தொலைபேசி அழைப்புகள், செய்திகள் அல்லது இணைய தளங்களின் வழியாக பணம் கோரும் நபர்களை நம்ப வேண்டாம் என கேட்டுக்கொண்டது. ஏதேனும் சந்தேகமான செயல்கள் ஏற்பட்டால் உடனே 1930 என்ற எண்னில் தொடர்பு கொண்டு புகார் அளிக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

error: Content is protected !!