News October 15, 2025

நெல்லை: களக்காடு தலையணையில் தடை

image

திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. நேற்று பல இடங்களில் பரவலாக கனமழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மழை காரணமாக களக்காடு தலையணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து அங்கு குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். நீர்வரத்து விபரத்தை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

Similar News

News October 16, 2025

நெல்லை கோட்டாட்சியர் பொறுப்பேற்பு

image

நெல்லை கோட்டாட்சியராக கண்ணா கருப்பையா பணியாற்றி வந்த நிலையில் அவர் அரியலூர் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதனையடுத்து நெல்லைக்கு புதிய கோட்டாட்சியராக சென்னை சிப்காட்டில் சிறப்பு துணை ஆட்சியராக பணியாற்றி வந்த பிரியா என்பவர் நியமிக்கப்பட்டார். அவர் இன்று முறைப்படி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார். பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

News October 16, 2025

நெல்லை: ரூ.14.77 கோடியில் விளையாட்டு மைதானம்

image

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் வட்டம் விஜயாபதியில் கடலோர மாவட்ட இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் விளையாட்டை மேம்படுத்த ரூபாய் 14.77 கோடி மதிப்பில் விளையாட்டு மைதானம் மற்றும் பயிற்சி மையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான அடிகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று காணொலி மூலம் நட்டி தொடங்கி வைத்தார். சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் கே என் நேரு, கலெக்டர் சுகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

News October 16, 2025

நெல்லை – தாம்பரம் இன்று சிறப்பு ரயில் விவரம் இதோ

image

தீபாவளி பண்டிகை கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு இன்று மற்றும் 18ம் தேதி சனிக்கிழமை ஆகிய தேதிகளில் தாம்பரத்திலிருந்து நெல்லை, வள்ளியூர் வழியாக கன்னியாகுமரி வரை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் இரவு 11:30 மணிக்கு புறப்பட்டு நெல்லைக்கு மறுதினம் காலை 11. 25 மணிக்கும், வள்ளியூருக்கு 11.43 மணிக்கும் வந்து சேரும்.

error: Content is protected !!