News October 15, 2025
திருவாரூர்: தினமும் 1000 நெல்மூட்டைகள் கொள்முதல்

திருவாரூர் மாவட்ட கொள்முதல் நிலையங்களில் நெல்மூட்டைகளை இயக்கம் செய்ய 5 மண்டல மேலாளர்களை கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தினமும் 1000 மூட்டைகள் கொள்முதல் செய்யவும், இரவு 8 மணி வரை பணியை தொடரவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தேவைக்கேற்ப புதிய நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட உள்ளது என்று ஆட்சியர் மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
Similar News
News October 15, 2025
திருவாரூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (அக்.15) இரவு முதல் நாளை (அக்.16) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்தில் உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்களும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!
News October 15, 2025
திருவாரூர் மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலெர்ட்!

தமிழகத்தில் நாளை (அக்.16) முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு இன்று (அக்.15) ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் திருவாரூர் மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE பண்ணுங்க!
News October 15, 2025
திருவாரூர் காவல்துறை எச்சரிக்கை

வாட்ஸ் அப் போன்ற சமூக ஊடகங்களில் பரிவாஹன் என்ற பெயரில் போலி லிங்குடன் APK கோப்புகள் அனுப்பப்படுவதாகவும், இது போன்ற லிங்க்குகளை கிளிக் செய்ய வேண்டாம் என்றும் இதன் மூலம் தங்களின் தரவுகள், பணம் திருடப்படலாம் என்றும் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருண் கரட் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.