News October 15, 2025
புதுச்சேரி: வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசனை

புதுச்சேரி பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அலுவலகத்தில், முத்தியால் பேட்டை தொகுதிக்கான வளர்ச்சிப் பணிகள் குறித்து சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் குமார் மற்றும் அரசு அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். இக்கூடத்தில் தொகுதியில் மேல்நிலை குடிநீர் தேக்கத் தொட்டிக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டத்தை விரைவில் துவங்குவது, முக்கிய வீதிகளில் சாலைகளை மேம்படுத்துவது உள்ளிட்ட ஆலோசனை மேற்கொண்டனர்.
Similar News
News October 16, 2025
புதுச்சேரி: EXAM இல்லை..வேலை ரெடி!

புதுவை மக்களே, இந்திய தபால் துறையின் கீழ் இயங்கும் IPPB-ல் GDS பணிக்கு 348 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டிகிரி முடித்தவர்கள் அக். 29க்குள் <
News October 16, 2025
புதுச்சேரி: மனைவி கண்டித்ததால் தற்கொலை

தட்டாஞ்சாவடியை சேர்ந்தவர் மனோகர் (48), மனைவி கிருஷ்ணகுமாரி இவர்களுக்கு ஒரு மகள், மகன் உள்ளனர். மனோகருக்கு மதுபழக்கம் இருந்ததால் இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்படும். இந்நிலையில் மனோகர் குடித்து விட்டு வந்ததை மனைவி திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்து வீட்டில் மின்விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து வில்லியனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News October 16, 2025
புதுச்சேரி: குடிநீர் விநியோகம் நிறுத்தம்

வில்லியனூர் குடிநீர் பிரிவு பொறையூர் மேல்நிலை தொட்டியில் (17.10.2025) பணிகள் நடக்கிறது. அதனால் நாளை நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை, பொறையூர் மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது. இதேபோல் கோபாலன்கடை பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் வரும் (18.10.2025) நண்பகலில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது.