News October 15, 2025
நெல்லை: கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை?

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி தனியார் பொறியியல் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக பேராசிரியர் சாமுவேல் ராஜ் (37) மீது நேற்று வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கேரளாவுக்கு சுற்றுலா சென்ற போது மாணவிக்கு பாலியல் தொல்லை நேர்ந்ததாக கூறப்படுகிறது. இந்த வழக்கு குறித்த தகவலை மாவட்ட எஸ்.பி அலுவலகம் இன்னும் வெளியிடவில்லை.
Similar News
News October 16, 2025
நெல்லை கோட்டாட்சியர் பொறுப்பேற்பு

நெல்லை கோட்டாட்சியராக கண்ணா கருப்பையா பணியாற்றி வந்த நிலையில் அவர் அரியலூர் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதனையடுத்து நெல்லைக்கு புதிய கோட்டாட்சியராக சென்னை சிப்காட்டில் சிறப்பு துணை ஆட்சியராக பணியாற்றி வந்த பிரியா என்பவர் நியமிக்கப்பட்டார். அவர் இன்று முறைப்படி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார். பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
News October 16, 2025
நெல்லை: ரூ.14.77 கோடியில் விளையாட்டு மைதானம்

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் வட்டம் விஜயாபதியில் கடலோர மாவட்ட இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் விளையாட்டை மேம்படுத்த ரூபாய் 14.77 கோடி மதிப்பில் விளையாட்டு மைதானம் மற்றும் பயிற்சி மையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான அடிகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று காணொலி மூலம் நட்டி தொடங்கி வைத்தார். சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் கே என் நேரு, கலெக்டர் சுகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
News October 16, 2025
நெல்லை – தாம்பரம் இன்று சிறப்பு ரயில் விவரம் இதோ

தீபாவளி பண்டிகை கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு இன்று மற்றும் 18ம் தேதி சனிக்கிழமை ஆகிய தேதிகளில் தாம்பரத்திலிருந்து நெல்லை, வள்ளியூர் வழியாக கன்னியாகுமரி வரை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் இரவு 11:30 மணிக்கு புறப்பட்டு நெல்லைக்கு மறுதினம் காலை 11. 25 மணிக்கும், வள்ளியூருக்கு 11.43 மணிக்கும் வந்து சேரும்.