News October 15, 2025
புதுவை: அரசு ஊழியர் மீது தாக்குதல்

உருளையன்பேட்டை, சுப்பையா நகரைச் சேர்ந்தவர் இளங்கோவன். அரசு அச்சகத்துறையில் பணியாற்றி வரும் இளங்கோவன், ரூ.11 லட்சம் கடனாக தனது மூத்த அண்ணன்களான ரமேஷுக்கும், ஸ்ரீதருக்கும் கொடுத்துள்ளார். அந்த பணத்தை இளங்கோவன் மீண்டும் கேட்டபோது அவர்களிடையே தகராறு ஏற்பட்டு இளங்கோவனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து உருளையன்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News October 16, 2025
தீபாவளி பரிசு தொகுப்பு வழங்கிய முதல்வர்

புதுச்சேரி, திலாசுபேட்டை தொகுதியில் தீபாவளி பரிசு தொகுப்பாக ரூ.585 மதிப்புள்ள 2-கிலோ சர்க்கரை, 2-கிலோ சூரியகாந்தி எண்ணெய், 1-கிலோ கடலைப்பருப்பு, ரவை, மைதா அரைக்கிலோ என தீபாவளி தொகுப்பை பொதுமக்களுக்கு மாநில முதல்வர் ரங்கசாமி வழங்கி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் திருமுருகன், அரசு கொறடா ஆறுமுகம், சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ், அரசு செயலர் முத்தம்மா ஆகியோர் கலந்து கொண்டனர்.
News October 16, 2025
புதுச்சேரி: EXAM இல்லை..வேலை ரெடி!

புதுவை மக்களே, இந்திய தபால் துறையின் கீழ் இயங்கும் IPPB-ல் GDS பணிக்கு 348 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டிகிரி முடித்தவர்கள் அக். 29க்குள் <
News October 16, 2025
புதுச்சேரி: மனைவி கண்டித்ததால் தற்கொலை

தட்டாஞ்சாவடியை சேர்ந்தவர் மனோகர் (48), மனைவி கிருஷ்ணகுமாரி இவர்களுக்கு ஒரு மகள், மகன் உள்ளனர். மனோகருக்கு மதுபழக்கம் இருந்ததால் இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்படும். இந்நிலையில் மனோகர் குடித்து விட்டு வந்ததை மனைவி திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்து வீட்டில் மின்விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து வில்லியனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.