News October 15, 2025

தேனியில் 11 பேர் சேர்ந்து தம்பதி மீது தாக்குதல்

image

சின்னமனூர் பகுதியை சேர்ந்தவர் ராம்குமார்(32). இவரது மனைவி சங்கீதா (30). அதே பகுதியை சேர்ந்த விஸ்வா என்பவருக்கும் ராம்குமாருக்கும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது. அதன் காரணமாக நேற்று முன்தினம் விஸ்வா மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து ராம்குமாரை தாக்கி உள்ளனர். அதனை தடுக்க சென்ற சங்கீதாவையும் அந்த கும்பல் தாக்கியது. இது குறித்து சின்னமனூர் போலீசார் விஸ்வா உள்ளிட்ட 11 பேர் மீது வழக்கு (அக்.14) பதிவு

Similar News

News October 16, 2025

தேனியில் தீபாவளியன்று கனமழைக்கு வாய்ப்பு

image

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மதுரை, தேனி, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, குமரி உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக தேனியில் அக். 19, 20, 21ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என கூறியுள்ளது. இந்த பயனுள்ள தகவலை ஷேர் பண்ணுங்க.

News October 16, 2025

தேனி மக்களே மழை காலத்தில் கரண்ட் கட்டா..? இத பண்ணுங்க

image

தேனி மக்களே தற்போது மழை காலம் தொடங்கியுள்ளதால் பல்வேறு பகுதியில் மின் விநியோகத்தில் பிரச்சனை எழும். அதனை சரி செய்ய லைன்மேனை நேரில் தேடி அலைய வேண்டாம். TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் உடனடியாக லைன் மேன் வருவார். இதை உடனே எல்லோருக்கும் SHARE பண்ணுங்க!.

News October 16, 2025

தேனி: ஆட்டோ மீது மோதிய கார்..! நொடி பொழுதில் விபரீதம்

image

ஆண்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் அழகர்சாமி (62). ஆட்டோ ஓட்டுனர் ஆன இவர் நேற்று (அக்.15) ஜம்புலிபுத்தூர் பேருந்து நிறுத்தத்தில் ஆட்டோவை ஓரமாக நிறுத்தி ஆட்களை ஏற்றி உள்ளார். அப்பொழுது சாலமன் பாபு ராஜா என்பவர் ஓட்டி வந்த கார் இவரது ஆட்டோ மீது மோதியது. இந்த விபத்தில் அழகர்சாமி மற்றும் ஆட்டோவில் பயணித்த இருவர் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்த ஆண்டிப்பட்டி வழக்கு பதிவு செய்து விசாரணை.

error: Content is protected !!