News April 16, 2024

தூத்துக்குடி அருகே 7 பேர் கைது

image

தூத்துக்குடி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர்கள் ஆதித்யா, அஜய். இவர்கள் நேற்று முன்தினம் அருண்குமார் என்பவருடன் மது அருந்தி கொண்டிருந்த போது ஏற்பட்ட தகராறில் அருண்குமார் உட்பட ஏழு பேர் அரிவாளால் ஆதித்யா, அஜய் ஆகிய இருவரையும் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 7 பேரையும் கைது செய்தனர்.

Similar News

News July 11, 2025

தூத்துக்குடியில் கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு

image

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தாலுகாவில் கிராம நிர்வாக உதவியாளர் பணிக்கான தேர்வு நடைபெற உள்ளது. மொத்தம் 77 காலிப்பணியிடங்கள் உள்ளது. 21 முதல் 37 வயதுக்கு உட்பட்டோர் ஆகஸ்ட் 3க்குள் இதற்கு விண்ணப்பிக்க வேண்டும். செப். 3ல் எழுத்து தேர்வு நடைபெற உள்ளது. இந்த <>லிங்கில்<<>> உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இப்பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE செய்யவும்.

News July 11, 2025

தூத்துக்குடி வேலைவாய்ப்பு முகாம்.. சீக்கிரம் பதிவு பண்ணுங்க

image

தூத்துக்குடியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் ஜூலை 19ம் தேதி St மேரிஸ் கல்லூரியில் நடைபெற உள்ளது. 200 நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. இதில் கலந்து கொள்ளும் நபர்கள் ஜூலை 18க்குள் பெயர், படிப்பு, வாட்ஸ்அப் எண், இ-மெயில், முகவரி உள்ளிட்ட தகவல்களை இந்த <>லிங்கில் கிளிக்<<>> செய்து பதிவு செய்துகொள்ள வேண்டும். 8 முதல் ITI, டிப்ளமோ, டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். வேலை தேடுவோருக்கு உடனே SHARE பண்ணுங்க.

News July 10, 2025

தூத்துக்குடி: இன்று இரவு ரோந்து போலீஸ் விவரம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விவரங்களை கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. இந்த ரோந்துபணிகளை விளாத்திக்குளம் DSP அசோகன் மேற்கொள்கிறார். அவசர காலங்களில் பொதுமக்கள் 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலீஸ் எண்ணான 9514144100 ஐ தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.

error: Content is protected !!