News October 15, 2025
காங்.,க்கு எதிராக உதயநிதி ஆதரவாளர்கள் போர்க்கொடி

கரூருக்கு வந்த உதயநிதி, உடனடியாக துபாய்க்கு சென்றது ஏன் என திருச்சி வேலுசாமி கேள்வி எழுப்பியிருந்தார். காங்., மூத்த நிர்வாகியின் இந்த பேச்சுக்கு, ‘ராஜீவ் கொலையில் கூட்டு சதி செய்த துரோகியே, நாவை அடக்கி பேசு’ என உதயநிதி ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர். இதற்கு, ‘திமுக, காங்., ஆதரவு இல்லாமல் தனித்து சாதிக்க முடியாது’ என வேலுசாமி ஆதரவாளர்கள் கூறியுள்ளனர். இதனால் கூட்டணியில் சிக்கல் எழுந்துள்ளது.
Similar News
News October 15, 2025
சோதனையை சாதனையாக்கிய ஜாம்பவான்கள் PHOTOS

உங்களுடைய கடின உழைப்பை யார் நிராகரித்தாலும், அதைப்பற்றி கவலைப்படாமல் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருங்கள். ஏனெனில், உலகில் தொடக்கத்தில் நிராகரிக்கப்பட்ட பலரும், நாளடைவில் தொழில் ஜாம்பவான்களாக உருவெடுத்து இருக்கின்றனர். யார் அவர்கள்? மேலே உள்ள போட்டோஸை SWIPE செய்து பாருங்கள். SHARE IT.
News October 15, 2025
செல்போன் ரீசார்ஜ்.. அதிரடி ஆஃபர்

தீபாவளியை முன்னிட்டு ₹1 ரீசார்ஜ் திட்டத்தை BSNL அறிமுகப்படுத்தியுள்ளது. ₹1 ரீசார்ஜ் செய்தால் 30 நாள்கள் வேலிடிட்டியுடன் நாள் ஒன்றுக்கு 2GB டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ்கால், நாள் ஒன்றுக்கு 100 SMS-ம் அனுப்பலாம். அக்.15 முதல் நவ.15 வரை இலவசமாக சிம்கார்டை வாங்கி ஒரு ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் போதும் என BSNL தெரிவித்துள்ளது.
News October 15, 2025
BREAKING: தவெக நிர்வாகிகளுக்கு ஜாமின்

கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் நிர்வாகி பவுன்ராஜ் ஆகியோருக்கு கரூர் குற்றவியல் நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது. இருவரும் கடந்த 30-ம் தேதி கைது செய்யப்பட்ட நிலையில், திருச்சி மத்திய சிறையில் உள்ளனர். இதில், மதியழகனை, நீதிமன்ற அனுமதி பெற்று SIT குழு 2 நாள்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.