News October 15, 2025
ஆட்சியில் பங்கு; முடிவை அறிவித்த சிபிஎம்

ஆட்சியில் பங்கு கேட்டு கூட்டணி கட்சிகள் திமுகவுக்கு அழுத்தம் கொடுத்துவருவதாகவும், இதனால் அறிவாலயத்தில் சலசலப்பு ஏற்பட்டிருப்பதாகவும் பேசப்பட்டது. இந்நிலையில், ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்றெல்லாம் நாங்கள் ஒருபோதும் யாரிடமும் கேட்க மாட்டோம் என சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். மேலும், திமுக கூட்டணியில் எந்த பிளவும் இல்லை எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
Similar News
News October 15, 2025
அமேசானில் 15% ஊழியர்களை நீக்க முடிவு

அமேசான் நிறுவனம் HR பிரிவில் இருந்து 15% ஊழியர்களை நீக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வேறு சில துறைகளை சார்ந்த ஊழியர்களை நீக்கவும் அமேசான் ஆலோசிக்கிறதாம். அந்நிறுவனம் AI மற்றும் கிளவுட் தொழில்நுட்பங்களில் ₹8,300 கோடி வரை முதலீடு செய்துள்ள நிலையில் இந்த வேலை நீக்கம் திட்டமிடப்பட்டுள்ளது. AI ஆதிக்கத்தால் சமீபத்தில் IBM நிறுவனத்தில் இருந்து 8,000 HR-கள் நீக்கப்பட்டிருந்தனர்.
News October 15, 2025
இந்தியாவில் காமன்வெல்த் போட்டிகள்… HAPPY NEWS!

2030-ல் காமன்வெல்த் போட்டிகளை இந்தியாவில் நடத்த காமன்வெல்த் விளையாட்டு வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக குஜராத்தின் அகமதாபாத் நகரம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. வரும் நவ.26-ம் தேதி இங்கிலாந்தில் நடைபெறும் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடைசியாக 2010-ல் டெல்லியில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்றது.
News October 15, 2025
17-ம் தேதி சபரிமலை கோயில் நடை திறப்பு

ஐப்பசி மாத பூஜைகளுக்காக வரும் 17-ம் தேதி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட உள்ளது. 22-ம் தேதி வரை கோயில் நடை திறந்திருக்கும். இதனிடையே வரும் 22-ம் தேதி ஜனாதிபதி திரெளபதி முர்மு சபரிமலை சென்று சுவாமியை தரிசிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 22-ம் தேதி ஆன்லைன் முன்பதிவுகள் முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.