News October 15, 2025
திருப்பூர்: தாய் – மகனுக்கு கத்தி குத்து!

திருப்பூர்: முத்தையன் கோயில் வீதியைச் சேர்ந்தவர் சிவகாமி(45). டெய்லரான இவர் அதே பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் ஆனந்தன் என்பவர் மூலம் பணியில் சேர்ந்தார். சேர்ந்த மூன்றே நாட்களில் வேலையை விட்டு நின்ற இவர், ஆனந்திடம் தனது சம்பள பணத்தை கேட்டு வந்துள்ளார். தொடர்ந்து வீட்டிலேயே தகராரு செய்த தாய் – மகனை ஆனந்தன் கத்தியால் குத்தினார். தற்போது இருவரும் சிகிச்சையில் உள்ளனர்.
Similar News
News October 15, 2025
திருப்பூர்: ரிதன்யா வழக்கில் அதிரடி உத்தரவு

திருப்பூர் மாவட்டத்தில் பரபரப்பாக பேசப்பட்ட இளம்பெண் ரிதன்யா (27 வயது) வரதட்சணை மரண விவகாரத்தில், ரிதன்யாவின் கணவர் கவின்குமார் தொடர்ந்த வழக்கில் தற்போது ரிதன்யாவின் 2 செல்போன்களை தடயவியல் சோதனை செய்ய காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் ரிதன்யா தனது தந்தைக்கு வாட்ஸ் ஆப்பில் குரல் குறிப்புகளை அனுப்பியது வெளியானது குறிப்பிடத்தக்கது.
News October 15, 2025
திருப்பூர்: தெரிய வேண்டிய முக்கிய எண்கள்!

திருப்பூர் மக்களே.., அவசர காலத்தில் உதவும் எண்கள்:
1)தீயணைப்புத் துறை – 101
2)ஆம்புலன்ஸ் உதவி எண் – 102 & 108
3)போக்குவரத்து காவலர் -103
4)பெண்கள் பாதுகாப்பு – 181 & 1091
5)ரயில்வே விபத்து அவசர சேவை – 1072
6)சாலை விபத்து அவசர சேவை – 1073
7)பேரிடர் கால உதவி – 1077
8)குழந்தைகள் பாதுகாப்பு – 1098
9)சைபர் குற்றங்கள் தடுப்பு – 1930
10)மின்சாரத்துறை – 1912. (SHARE IT)
News October 15, 2025
திருப்பூர்: பண்ணை தொடங்க 50% மானியம் பெறுவது எப்படி?

1)நாட்டுக் கோழிப் பண்ணைக்கு மானியம் வழங்கும் திட்டத்தில் 250 கோழிக் குஞ்சுகள், 50%மானியம், கொட்டகை, உபகரணங்கள் அரசால் வழங்கப்படும்.
2)இதற்கு 625 சதுரடி நிலம், அதற்கான சிட்டா வைத்திருத்தல் அவசியம்.
3)இதற்கு 50% மானியம், மீதமுள்ள 50% வங்கிக் கடனாகவும் பெறலாம்.
4)அருகே உள்ள கால்நடை மருத்துவமனைக்கு சென்று விண்ணப்பிக்கலாம்.
உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!