News October 15, 2025

நெல்லை: தீபாவளி வசூல் வேட்டை – போலீசார் கண்காணிப்பு

image

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் நெல்லை மாவட்டத்தில் 20க்கும் மேற்பட்ட முக்கிய அரசுத்துறைகளில் பரிசுப் பொருட்கள் மற்றும் வசூல் வேட்டை தவிர்க்க மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் ரகசிய கண்காணிப்பு பணியை தீவிரப் படுத்தி உள்ளனர். இது தொடர்பாக ரகசிய தகவல்களை திரட்டி வருகின்றனர். தொடர்ந்து பல்வேறு முக்கிய அரசு துறைகளை கண்காணித்து சோதனை நடத்தவும் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Similar News

News October 16, 2025

நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்

image

பாபநாசம் : உச்சநீர்மட்டம் : 143 அடி, நீர் இருப்பு : 84 அடி, நீர் வரத்து : 135.97 கனஅடி வெளியேற்றம் : 350 கன அடி; சேர்வலாறு : உச்சநீர்மட்டம் : 156 அடி, நீர் இருப்பு : 96.98 அடி, நீர்வரத்து : NIL, வெளியேற்றம் : NIL; மணிமுத்தாறு : உச்சநீர்மட்டம்: 118, நீர் இருப்பு : 92.11 அடி, நீர் வரத்து : 201.29 கனஅடி, வெளியேற்றம் : 30 கனஅடி; வடக்கு பச்சையாறு: உச்சநீர்மட்டம்: 50 அடி, நீர் இருப்பு: 11 அடி.

News October 16, 2025

BREAKING: நெல்லையில் பள்ளிகளுக்கு விடுமுறை

image

நெல்லை மாவட்டம் முழுவதும் நேற்று இரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக பாளை, சேரன்மகாதேவி வட்டாரங்களில் கனத்த மழை பெய்கிறது. இதனிடையே திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மழையின் காரணமாக இன்று (16.10.2025) ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சித் தலைவர் மரு இரா.சுகுமார் உத்தரவிட்டுள்ளார்.

News October 16, 2025

தீபாவளி நேரங்களில் இதனை செய்யாதீர்கள் – நெல்லை காவல்

image

தீபாவளி பண்டிகை வருகிற திங்கள் கிழமை கொண்டாடப்பட உள்ளது. இத்த நிலையில் பேருந்துகள், ரயில்கள் போன்ற பொது போக்குவரத்து வாகனங்களில் பட்டாசுகள் மற்றும் பிற வெடிக்கும் பொருட்களை எடுத்துச் செல்வது சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது. எனவே பேருந்துகள், ரெயில்களில் பயணிகள் பட்டாசுகளை கொண்டு செல்ல வேண்டாம் என திருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. *ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!