News October 15, 2025

திருப்பத்தூர்: குளத்தில் குளித்தவர் சடலமாக மீட்பு

image

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பெத்லகேம் நான்காவது திறப்பு பகுதியைச் சேர்ந்த அஜய், நண்பர்களுடன் கம்பி கொள்ளை பகுதியில் உள்ள ஆணை மடகு தடுப்பணையில் இன்று குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கி மாயமானார். தகவல் அறிந்து வந்த காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர், 2 மணி நேர தேடலுக்குப் பின் அஜய்யின் சடலத்தை மீட்டனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News October 15, 2025

திருப்பத்தூர்: EXAM இல்லை.. POST OFFICE-ல் வேலை ரெடி!

image

இந்திய தபால் துறையின் கீழ் இயங்கும் IPPB-ல் GDS பணிக்கு 348 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டிகிரி முடித்தவர்கள் அக். 29க்குள் <>இங்கு கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். தேர்வு இல்லை. மதிப்பெண் அடிப்படையில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவர். சம்பளம்: ரூ.30,000 வழங்கப்படும். டிகிரி முடித்த உங்கள் நண்பர்களுக்கு இந்த தகவலை உடனே SHARE பண்ணுங்க.

News October 15, 2025

திருப்பத்தூர் பெற்றோர்கள் கவனத்திற்கு..!

image

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தனது சமூக வலைத்தள பக்கத்தில், தற்போது மழை காலம் என்பதால் நீர் நிலைகள் நிரம்பும் அபாயம் உள்ளது. எனவே சிறுவர்களை ஏரி, குளம், நீர் நிரம்பிய பகுதிகளுக்கு செல்ல அனுமதிக்க வேண்டாம் என்றும் நமது பிள்ளைகளை காப்பது நமது கடமை எனவே எச்சரிக்கையுடன் இருக்க எனவும் பெற்றோர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே வீட்டில் பிள்ளைகளின் நடவடிக்கைகளை கவனியுங்கள். ஷேர்!

News October 15, 2025

திருப்பத்தூர்: பணம் திருடு போய்டுச்சா ? இத பண்ணுங்க

image

மொபைல் பயன்பாடு அதிகரித்து வரும் காலத்தில் லிங்க் அனுப்பி பணம் திருடுதல், வங்கி ஊழியர் போல் பேசி திருடுதல், தனிப்பட்ட தகவல்கள் திருட்டு போன்ற குற்றங்களும் அதிகரித்து வருகிறது. சைபர் கிரைம் தொடர்பான புகார்களுக்கு சைபர் கிரைம் ADGP-044-29580300, மாநில கட்டுப்பாட்டு அறை-044-29580200, TOLL FREE NO-1930, திருப்பத்தூர் எஸ்.பி அலுவலகத்திலும் புகார் அளிக்கலாம் . ஷேர் பண்ணுங்க விழிப்போடு இருங்கங்க.

error: Content is protected !!