News October 15, 2025
தேனி மக்களுக்கு முக்கிய அறிவிப்பு…தெரிஞ்சுகோங்க

தேனியில் வடகிழக்கு பருவ மழை தொடங்கவுள்ளதால் ஆறுகள், ஓடைகளில் தண்ணீர் வரத்து அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன. மழை வெள்ள பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி எண்: 04546-261093.ல் தொடா்பு கொண்டும், 9487771077 எண்ணில் வாட்ஸ் ஆப் மூலம் தொடா்பு கொண்டும் தெரிவிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தகவல்.மற்றவர்களுக்கும் தெரிய SHARE பண்ணுங்க.
Similar News
News October 15, 2025
தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

தேனி மாவட்டத்தில் இன்று 15.10.2025 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை தேனி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பெரியசாமி தலைமையில் இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.
News October 15, 2025
தேனியில் பட்டப் பகலில் வீடு புகுந்து திருட்டு

ஓடைப்பட்டி பகுதியை சேர்ந்தவர் நாகராஜன். இவர் அப்பகுதியில் உள்ள சகோதரரின் தோட்டத்தை வீட்டில் தங்கி இருந்து தோட்டத்தை கவனித்து வந்துள்ளார். நேற்று (அக்.14) காலை வேலை விஷயமாக வெளியே சென்று விட்டு சிறிது நேரம் கழித்து மீண்டும் தோட்டத்து வீட்டிற்கு வந்து பார்த்தபொழுது வீட்டில் வைக்கப்பட்டிருந்த டிவி திருடப்பட்டு தெரிய வந்தது. திருட்டு சம்பவம் குறித்து ஓடைப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.
News October 15, 2025
தேனி அருகே பெண்களுக்கான இலவச அழகுக்கலை பயிற்சி

தேனி மாவட்டம் கருவேல்நாயக்கன்பட்டியில் உள்ள கனரா வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் வரும் 22.10.2025 தேதி முதல் பெண்களுக்கான இலவச அழகுக்கலை பயிற்சி நடைபெற உள்ளது. இந்த பயிற்சியில் சேர விருப்பமுள்ளவர்கள் 22.10.2025 தேதிக்குள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என பயிற்சி மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவலுக்கு இந்த 8870376796 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.