News October 15, 2025

இந்திய ஆயுதங்களை வாங்க உலகநாடுகள் ஆர்வம்

image

ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் வான் பலத்தை உலகிற்கு நிரூபித்துள்ளது. உள்நாட்டு தயாரிப்பான பினாகா ராக்கெட் ஏவுதளத்தை வாங்க ஆர்வம் காட்டியுள்ள ஃபிரான்ஸ், இந்தியாவுடன் இணைந்து ஆயுதங்களை உருவாக்க விருப்பமும் தெரிவித்துள்ளது. முன்னதாக, ஆகாஷ் வான் பாதுகாப்பு அமைப்பு, D4 டிரோன் எதிர்ப்பு அமைப்பு, பிரமோஸ் ஏவுகணைகளை வாங்க அர்மீனியா, பிலிப்பைன்ஸ், எகிப்து, வியட்நாம், பிரேசில் நாடுகள் விருப்பம் தெரிவித்தன.

Similar News

News October 15, 2025

BREAKING: அறிவித்தார் விஜய்

image

கரூரில் உயிரிழந்த 41 பேருக்கு TVK சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் நினைவேந்தல் கூட்டம் நடத்த விஜய் உத்தரவிட்டுள்ளார். 41 பேரின் படங்களுக்கு மலர் தூவியும், மெழுகுவர்த்தி ஏந்தியும் மவுன அஞ்சலி செலுத்தவும் அறிவுறுத்தியுள்ளார். கரூர் சம்பவத்தால் கட்சி பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததோடு, புதிய அறிவிப்புகளை வெளியிடாமல் இருந்த நிலையில், இந்த அறிவிப்பை விஜய் வெளியிட்டுள்ளார்.

News October 15, 2025

உலகின் மகிழ்ச்சியான நகரம் இதுதான்!

image

Time Out Index வெளியிட்ட 2025-ன் உலகின் மகிழ்ச்சியான நகரங்களின் பட்டியலில் அரபு நாடான UAE-இன் தலைநகர் அபுதாபி முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது. நல்ல வாழ்க்கைத் தரம், பாதுகாப்பு, பல கலாசார மக்கள் வாழ்வது ஆகிய காரணங்களால் அந்நகர மக்கள் அதிக மகிழ்ச்சியில் உள்ளனராம். இந்த பட்டியலில் உள்ள டாப்-5 நகரங்களில் இந்திய நகரம் ஒன்றும் உள்ளது. அதை தெரிந்துகொள்ள மேலே உள்ள போட்டோக்களை ஸ்வைப் பண்ணி பாருங்க.

News October 15, 2025

இந்த தீபாவளிக்கு இத பத்தியும் யோசிங்க!

image

ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என அரசு அறிவுறுத்துகிறது. ஆனால் அதை மதிக்காதவர்களே இங்கு அதிகம். 2024-ல் இந்தியாவில் 1,16,000 குழந்தைகள் காற்று மாசுபாட்டால் உயிரிழந்துள்ளனர். இவ்வளவு கொடியதாக இருக்கும் காற்று மாசுபாட்டை குறைக்கவே அரசு இம்மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. இந்த தீபாவளிக்காவது பட்டாசு வெடிப்பதற்கான நேர கட்டுப்பாட்டை பின்பற்றுவோம். SHARE.

error: Content is protected !!