News October 15, 2025

ரோஹித், கோலி ஓய்வு குறித்து BCCI விளக்கம்

image

ஆஸி.,க்கு எதிரான ODI தொடர் வரும் 19-ம் தேதி தொடங்குகிறது. இதுவே ரோஹித், கோலிக்கு கடைசி தொடராக இருக்கும், அதன்பிறகு ODI-ல் ஓய்வு அளிக்கப்படும் என தகவல் வெளியானது. ஆனால், இந்த தகவல் முற்றிலும் தவறானது என BCCI துணை தலைவர் ராஜீவ் சுக்லா மறுப்பு தெரிவித்துள்ளார். வீரர்கள் தான் ஓய்வு குறித்து முடிவு செய்வார்கள் எனவும், இந்த 2 வீரர்களின் அனுபவம் இந்திய அணிக்கு அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார்.

Similar News

News October 15, 2025

BREAKING: வெளிநடப்பு செய்தார் இபிஎஸ்

image

கரூர் விவகாரத்தில் பேரவையில் அதிமுகவினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். கரூர் துயரம் பற்றிய விவாதத்தின்போது, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை அமைச்சர் சிவசங்கர் குறிப்பிட்டார். இதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க கோரி, CM இருக்கை அருகிலேயே தரையில் அமர்ந்து EPS உள்ளிட்ட அதிமுக MLA-க்கள் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். மேலும், அப்பாவுவை கண்டித்தும் அவர்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

News October 15, 2025

உடற்கூராய்வு: இபிஎஸ் கேள்வி, அமைச்சர் பதில்

image

கரூர் சம்பவத்தில் உயிரிழந்த 39 பேரின் உடல்களுக்கு ஒரே இரவில் எப்படி உடற்கூராய்வு செய்தீர்கள் என்று சட்டப்பேரவையில் இபிஎஸ் கேள்வி எழுப்பியுள்ளார். அவ்வளவு அவசரமாக உடற்கூராய்வு செய்தது ஏன் என்றும் அவர் வினவினார். அதற்கு, 25 மருத்துவர்களை கொண்டு ஆட்சியர் அனுமதியுடன் தான் உடற்கூராய்வு செய்ததாக அமைச்சர் மா.சு., பதிலளித்துள்ளார். இதற்கான முழு வீடியோ ஆதாரம் உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

News October 15, 2025

எல்லாருக்கும் BP-யா? சபாநாயகர் அப்பாவு கிண்டல்!

image

சட்டப்பேரவைக்கு கைகளில் கருப்பு பட்டை அணிந்து வந்த அதிமுக MLA-க்களை பார்த்து, அனைவருக்கும் ஒன்றாக BP அதிகமாகி விட்டதோ என்று நினைத்து விட்டதாக சபாநாயகர் அப்பாவு கிண்டலடித்தார். சிறையில் சிறைவாசிகள் அடையாள பட்டை அணிந்திருப்பது போல் உள்ளதாக அமைச்சர் ரகுபதியும் கூறிய நிலையில், சபாநாயகர் மற்றும் அமைச்சரின் பேச்சால் பேரவையில் சிரிப்பலை எழுந்தது.

error: Content is protected !!