News October 15, 2025
கோவைப்புதூர்: பாலியல்தொழில் 4 பேர் கைது!

கோவை, கோவைப்புதூர் காமாட்சி நகரில் உள்ள வீட்டில் பாலியல் தொழில் நடப்பதாக குனியமுத்தூர் போலீசாருக்கு தகவல் வந்தது. பின் குனியமுத்தூர் போலீசார் நேற்று அங்கு சென்று வீட்டில் நடத்திய சோதனையில் பாலியல் தொழில் நடப்பது தெரியவந்தது. பின் புரோக்கர்கள் முருகன் (29), சங்கீதா (30), மல்லிகா (25) மற்றும் சுகன்யா (25) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான ஸ்ரீ என்பவரை தேடி வருகின்றனர்.
Similar News
News October 15, 2025
கோவை: உடல் கருகி முதியவர் பலி

கோவை தாயனூர் நஞ்சப்பன் நகரை சேர்ந்தவர் குருந்தாசலம்(70). இவருக்கு பழனியம்மாள் என்ற மனைவியும், ஒரு மகளும், இரு மகன்களும் உள்ளனர். இதில் நாகராஜ் என்ற மகன் வீட்டில் குருந்தாச்சலம், பழனியம்மாள் இருவரும் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்றிரவு குருந்சாச்சலம் வீட்டின் வெளியில் படுத்தவாறெ பீடி பற்ற வைத்ததாக கூறப்படுகிறது. அப்போது, உடலில் தீப்பற்றி கருகி பலியானார். காரமடை போலீசார் விசாரிக்கின்றனர்.
News October 15, 2025
கோவை: மனநலம் குன்றிய பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!

கோவையை சேர்ந்த ஒருவருக்கு இரு மகள்கள். மூத்த மகளுக்கு திருமணமாகி தனியாக வருகிறார். இளையமகள் மன வளர்ச்சி குன்றியவர் என கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இளைய மகள் மாயமாகியுள்ளார். தேடிய போது அருகில் உள்ள கட்டிடத்தில் ஆடை கலைந்த நிலையில் பாலியல் தொல்லை அளித்து இருப்பது தெரியவந்தது. இது குறித்து புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட செட்டிபாளையம் போலீசார் கட்டிட தொழிலாளி விஜய் என்பவரை கைது செய்தனர்.
News October 15, 2025
கோவை: POST OFFICE-ல் வேலை ரெடி!

இந்திய தபால் துறையின் கீழ் இயங்கும் IPPB-ல் GDS பணிக்கு 348 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டிகிரி முடித்தவர்கள் அக்.29க்குள் https://ibpsonline.ibps.in/ippbljul25/ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். தேர்வு இல்லை. மதிப்பெண் அடிப்படையில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவர். சம்பளம்: ரூ.30,000 வழங்கப்படும். டிகிரி முடித்த உங்கள் நபர்களுக்கு இத்தகவலை உடனே SHARE பண்ணுங்க.