News October 15, 2025
சென்னிமலையில் மீண்டும் தெரு நாய் அட்டகாசம்

சென்னிமலை ஊராட்சி ஒன்றியம், ஓட்டப்பாரை கிராம ஊராட்சி உட்பட்ட இச்சிப்பட்டி ஆதிதிராவிடர் காலனியை சார்ந்த குருநாதன் மகன் கிருஷ்ணன், 14 ஆடுகள் வளர்த்து வந்தார். நேற்று முந்தினம் இரவு வெறிநாய்கள், பட்டியில் மூங்கில் தப்பையை கடித்து உள்ளே புகுந்து, ஆறு ஆடுகளை கடித்ததில், இரண்டு ஆடுகள் இறந்து விட்டது. நான்கு ஆடுகள் படுகாயம் அடைந்து விட்டது. இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி உள்ளனர்.
Similar News
News October 15, 2025
ஈரோட்டில் இப்படி ஒரு கிராமமா?

ஈரோடு மாவட்டம், வடமுகம் வெள்ளோடு அருகேயுள்ள பி.மேட்டுப்பாளையம் பகுதியில் பறவைகள் சரணாலயம் உள்ளது. இந்நிலையில், ஆண்டு தோறும் இங்கு அக்டோபர் மாதம் தொடங்கி மார்ச் மாதம் வரையில் பறவைகளுக்காக இனப்பெருக்கு சீசன் தொடங்கும். எனவே இங்கு வரும் பறவைகளை பாதுகாக்கும் வகையில் இங்குள்ள 10க்கும் மேற்பட்ட கிராமத்தினர் இந்த ஆண்டு 19வது ஆண்டாக பட்டாசு வெடிக்காமல் கட்டுப்பாடுகளோடு வாழ்ந்து வருகின்றனர்.
News October 15, 2025
ஈரோடு: POST OFFICE-ல் வேலை ரெடி!

இந்திய தபால் துறையின் கீழ் இயங்கும் IPPB-ல் GDS பணிக்கு 348 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டிகிரி முடித்தவர்கள் அக்.29க்குள் https://ibpsonline.ibps.in/ippbljul25/ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். தேர்வு இல்லை. மதிப்பெண் அடிப்படையில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவர்.சம்பளம்: ரூ.30,000 வழங்கப்படும். டிகிரி முடித்த உங்கள் நபர்களுக்கு இத்தகவலை உடனே SHARE பண்ணுங்க.
News October 15, 2025
ஈரோடு வீடு கட்ட ரூ.2.10 லட்சம் வேண்டுமா?

முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் பற்றி தெரியுமா? வீடு இல்லமால் தவிக்கும் குடும்பங்களுக்கு இலவசமாக 300 சதுரடியில் ரூ.2.10 லட்சம் மதிப்பில் மழை நீர் சேகரிப்பு வசதி, 5 சூரிய சக்தியால் இயங்கும் CF விளக்கு வசதியுடன் வீடு கட்டி தரப்படும். இந்த திட்டத்தில் நீங்களும் பயனடைய வேண்டுமா? உங்கள் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் வீடு கட்டும் கனவு நிறைவேறும். SHARE பண்ணுங்க!