News October 15, 2025
பூங்கா திறந்து வைத்த அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள வைர விழா பூங்கா திறப்பு விழா இன்று அக்.14 நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் தர்மபுரி பொறுப்பு அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பூங்காவினை திறந்து வைத்து சிறப்பித்தார் இந்நிகழ்வில் தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் தர்மபுரி எம்பி மணி கலந்து கொண்டனர்.
Similar News
News October 15, 2025
தருமபுரியில் பணம் திருடு போய்டுச்சா? இத பண்ணுங்க

தருமபுரி மக்களே, மொபைல் பயன்பாடு அதிகரித்து வரும் காலத்தில் லிங்க் அனுப்பி பணம் திருடுதல், வங்கி ஊழியர் போல் பேசி திருடுதல், தனிப்பட்ட தகவல்கள் திருட்டு போன்ற குற்றங்களும் அதிகரித்து வருகிறது. சைபர் கிரைம் தொடர்பான புகார்களுக்கு சைபர் கிரைம் ADGP-044-29580300, மாநில கட்டுப்பாட்டு அறை-044-29580200, TOLL FREE NO-1930, எஸ்.பி அலுவலகத்திலும் புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க விழிப்போடு இருங்கங்க.
News October 15, 2025
தர்மபுரியில் ரூபாய்.50 லட்சம் தேர்தல் நிதி

தருமபுரி மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நேற்று (அக்.14) முப்பெரும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் விசிக தர்மபுரி மேற்கு மற்றும் மைய மாவட்டங்களின் சார்பில் தேர்தல் நிதியாக ரூ.50 லட்சம் வழங்கினர். ஏற்கனவே விசிக தர்மபுரி கிழக்கு மாவட்டத்தின் சார்பில் ரூ.31.50 லட்சம் வழங்கினார்கள். தர்மபுரி ஒருங்கிணைந்த மாவட்டத்தின் சார்பில் 81,50,000 நிதி வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.
News October 15, 2025
தர்மபுரியை வரலாற்றுச் சின்னமாக மாற்றுவோம்- ஆட்சியர் உறுதி !

2025ம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நிர்வாகம் வனத்துறை, சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் தன்னார்வலர்கள் அமைப்பு ஆகியோர் இணைந்து 83,5500 பனை விதைகள் நடவு செய்வோம் என நேற்று (அக்.14) உறுதியேற்றனர். மேலும் நாம் அனைவரும் இணைந்து இந்த பனை விதை நடவு இயக்கத்தை சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலையான வளர்ச்சிக்கான வரலாற்று சின்னமாக ஆக்குவோம் என்று தர்மபுரி கலெக்டர் அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளார்.