News October 14, 2025

கரூர் வழக்கு: ஆவணங்களை ஒப்படைத்தது SIT

image

கரூர் சம்பவம் தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் சிபிஐ-க்கு மாற்றி நேற்று உத்தரவிட்டது. அத்துடன், சிபிஐக்கு வழக்கை மாற்றியதால், சிறப்பு புலனாய்வு குழுவுக்கு (SIT) இடைக்கால தடைவிதித்தது. இதனால் SIT குழுவினர் இந்த விவகாரம் தொடர்பான ஆவணங்கள், வாக்குமூலங்களை கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். இந்த ஆவணங்கள் உடனடியாக சிபிஐ-யிடம் வழங்கப்படும்.

Similar News

News October 15, 2025

ஜெயலலிதா முன்பு இப்படி பேச முடியுமா? அமைச்சர்

image

தேர்தல் நேரத்தில் பொண்டாட்டி கூட இலவசமாக வழங்குவார்கள் என சி.வி.சண்முகம் மிக கீழ்த்தரமாக பேசியதாக அமைச்சர் கீதா ஜீவன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா இருக்கும் போது அவரால் இப்படி பேசியிருக்க முடியுமா? ஒரு கண்டனம் கூட தெரிவிக்காத EPS வீட்டிலும் பெண்கள் இருக்கிறார்கள்தானே என்றும் அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார். பெண்கள் மீது அதிமுகவிற்கு இருக்கும் வக்கிரம் வெளிப்பட்டிருப்பதாகவும் சாடியுள்ளார்.

News October 15, 2025

சர்க்கரைவள்ளிக் கிழங்கில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்

image

உணவு, உடை, வேலை சூழல் என அன்றாட வாழ்க்கை முறை மாறி வருகிறது. இந்த சூழலில் நமது உடல்நலத்தை பேணுவதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது அவசியமாகிறது. இந்த சூழலில் ஊட்டச்சத்து மிக்க உணவுகளை எடுத்துக் கொள்வது உடல் ஆரோக்யத்தை மேம்படுத்த உதவுகிறது. அந்த வகையில், சர்க்கரை வள்ளிக்கிழங்கின் பல நன்மைகள் அடங்கியுள்ளன. அதனை மேலே Swipe செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

News October 15, 2025

கரூர் துயரம்: இரவில் CM ஸ்டாலின் ஆலோசனை

image

கரூரில் விஜய் தேர்தல் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 உயிரிழந்தது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், அரசியல் கூட்டங்களுக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய மசோதா, நடப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. CM ஸ்டாலின் இதுதொடர்பாக என்.ஆர்.இளங்கோ MP, அதிகாரிகளுடன் நேற்று இரவு ஆலோசனையில் ஈடுபட்டார்.

error: Content is protected !!