News October 14, 2025
ரேஷன் கடைகளில் தீபாவளி பரிசு.. தமிழக அரசு உத்தரவு

ஓய்வூதியம் பெறும் முதியோருக்கு, தீபாவளி பரிசாக ரேஷன் கடைகளில் வேட்டி, சேலை வழங்கப்படும் என TN அரசு அறிவித்திருந்தது. பயோமெட்ரிக் மூலம் அடையாளத்தை சரிபார்த்து வேட்டி, சேலைகளை வழங்க உத்தரவிட்டிருந்தது. ஆனால், வயது மூப்பால் பலரின் கைவிரல் ரேகை, கருவிழி மூலம் சரிபார்ப்பது தோல்வியடைய வாய்ப்புள்ளது. அப்படியானவர்களுக்கு அங்கீகாரச் சான்று இருந்தால் வேட்டி, சேலை வழங்கலாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது. SHARE
Similar News
News October 15, 2025
ஸ்டீவ் ஜாப்ஸ் பொன்மொழிகள்

*பிரச்சனையை சரியாக வரையறுத்துவிட்டாலே கிட்டத்தட்ட தீர்வு உங்களிடம் இருக்கும். *மற்றவர்களின் கூச்சல் மற்றும் கருத்துக்கள் உங்கள் உட்குரலை மூழ்கடிக்கச் செய்ய அனுமதிக்காதீர்கள். *எல்லாவற்றையும் செய்ய முயற்சிக்காதீர்கள். ஒரு விஷயத்தைச் சிறப்பாகச் செய்யுங்கள். *தோல்விக்குப் பயந்தால் நீங்கள் வெகுதூரம் செல்ல மாட்டீர்கள்.
*உங்களுக்குப் பேரார்வம் இல்லையெனில், உங்கள் இலக்கைவிட்டு வெளியேறிவிடுவீர்கள்.
News October 15, 2025
Pro Kabaddi League: ஒரு புள்ளியில் தோற்ற தமிழ் தலைவாஸ்

புரோ கபடி லீக் தொடரில் உபி உத்தாஸ் அணியிடம் 1 புள்ளி வித்தியாசத்தில் தமிழ் தலைவாஸ் அணி தோல்வியடைந்தது. ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் தமிழ் தலைவாஸ் புள்ளிகளை குவித்த நிலையில், உபி வீரர்கள் அபாரமாக ஆடி அதை கட்டுப்படுத்தினர். முதல் பகுதியில் தமிழ் வீரர்கள் அதிக புள்ளிகள் எடுத்தாலும், 2-வது பகுதியில் உபி வீரர்களின் கையே ஓங்கியது. இறுதியில் 32-31 புள்ளி கணக்கில் தமிழ் தலைவாஸ் தோல்வியடைந்தது.
News October 15, 2025
தலைக்கு ₹7 கோடி: பயங்கர மாவோயிஸ்ட் சரண்

தலைக்கு ₹7 கோடிக்கும் மேல் அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்ட் மல்லஜொலு வேணுகோபால் ராவ், தனது 60 போராளிகளுடன் பாதுகாப்பு படையினரிடம் சரணடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மகாராஷ்டிரா CM பட்னவிஸ் முன்னிலையில் இன்று அதிகாரப்பூர்வமாக சரணடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மூத்த மாவோயிஸ்ட்டான வேணுகோபால், 76 CRPF ஜவான்கள் கொல்லப்பட்ட 2010 தண்டேவாடா தாக்குதல் உள்பட பல தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர்.