News October 14, 2025
நாகை விவசாயிகளுக்கு ஆட்சியர் அறிவுரை

நாகை மாவட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள சம்பா நெற்பயிர்களில் தண்டு துளைப்பான், புகையான் மற்றும் இலை சுருட்டுப்புழு பாதிப்பு அதிகம் காணப்படுகிறது. எனவே விவசாயிகள் பசுந்தாள் உர பயிர்களை அதிகம் பயன்படுத்த வேண்டும். யூரியா, டிஏபி போன்ற உரங்களை பரிந்துரைக்கப்பட்ட அளவில் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என விவசாயிகளுக்கு நாகை ஆட்சியர் ஆகாஷ் அறிவுறுத்தியுள்ளார்.
Similar News
News October 15, 2025
நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

நாகை மாவட்டத்தில் நேற்று (அக்.14) இரவு 10 மணி முதல் இன்று(அக்.15) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் கைபேசி எண்ணும் வழங்க
News October 14, 2025
நாகை: ரேஷன்கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு!

ரேஷன் கார்டுகளில் மாற்றம் செய்ய போறீங்களா? தமிழக அரசு ரேஷன் கார்டுகளுக்கு கொண்டு வந்துள்ள புதிய நடைமுறைகள் இதோ: நபர்கள் சேர்த்தல், பெயர் நீக்குதல், முகவரி மாற்றம், கார்டு மீண்டும் பிரிண்ட் செய்தல் போன்றவைகளை வருடத்திற்கு 2 முறை மட்டுமே ஆன்லைனில் செய்ய முடியும். எனவே மாற்றம் செய்யும் போது ஆவணங்களை சரிபார்த்து சரியா பண்ணுங்க.. ரேஷன் அட்டைகளில் மாற்றம் செய்ய <
News October 14, 2025
நாகை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

நாகை மாவட்டத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபின இனத்தை சேர்ந்த மாணவர்கள் வெளிநாட்டு பல்கலைகழகங்களில் உயர்கல்வி பயில கல்வி கடன் வழங்கப்பட உள்ளது. எனவே விருப்பமுள்ள மாணவர்கள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலரை அணுகி பயன்பெறலாம் என ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.