News October 14, 2025
ஆந்திராவில் ₹1.3 லட்சம் கோடியில் AI மையம்

விசாகப்பட்டினத்தில் பிரமாண்ட AI மையம் அமைக்க ஆந்திர அரசுடன் கூகுள் நிறுவனம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் 15 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ₹1.3 லட்சம் கோடி) செலவில் அமையவுள்ள ஒரு ஜிகாவாட் திறன் கொண்ட AI மையம் 2029-ம் ஆண்டிற்குள் கட்டி முடிக்கப்படவுள்ளது. இது இந்தியாவின் டிஜிட்டல் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் என PM மோடி தெரிவித்துள்ளார்.
Similar News
News October 15, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: காலமறிதல் ▶குறள் எண்: 489 ▶குறள்: எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே செய்தற் கரிய செயல். ▶பொருள்: கிடைப்பதற்கு அரிய காலம் வாயக்கும்போது அதைப் பயன்படுத்திக் கொண்டு அப்போதே செயற்கரிய செய்து முடிக்க வேண்டும்.
News October 15, 2025
ரோஹித், கோலி ஓய்வு குறித்து BCCI விளக்கம்

ஆஸி.,க்கு எதிரான ODI தொடர் வரும் 19-ம் தேதி தொடங்குகிறது. இதுவே ரோஹித், கோலிக்கு கடைசி தொடராக இருக்கும், அதன்பிறகு ODI-ல் ஓய்வு அளிக்கப்படும் என தகவல் வெளியானது. ஆனால், இந்த தகவல் முற்றிலும் தவறானது என BCCI துணை தலைவர் ராஜீவ் சுக்லா மறுப்பு தெரிவித்துள்ளார். வீரர்கள் தான் ஓய்வு குறித்து முடிவு செய்வார்கள் எனவும், இந்த 2 வீரர்களின் அனுபவம் இந்திய அணிக்கு அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார்.
News October 15, 2025
‘டியூட்’ படத்திற்காக தூக்கத்தை தொலைத்த நடிகை

‘டியூட்’ படத்தில் தனக்கு பல உணர்வுப்பூர்வமான காட்சிகள் இருப்பதாக நடிகை மமிதா பைஜு தெரிவித்துள்ளார். உணர்வுப்பூர்வமான காட்சிகளில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த வேண்டும் என்பதால், இரவில் தூங்காமல் வசனங்களை மனப்பாடம் செய்து பயிற்சி எடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார். அதனால், தனது நடிப்பு ரசிகர்களை பெரிய அளவில் கவரும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.