News October 14, 2025

கள்ளக்குறிச்சி: அரசு திட்டம் கிடைக்கவில்லையா..? இதை பண்ணுங்க

image

கள்ளக்குறிச்சி மக்களே உங்களுக்கு அரசு திட்டம் வந்து சேரவில்லையா? கவலை வேண்டாம். தமிழக அரசு “நீங்கள் நலமா?” என்ற தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அரசு திட்டங்கள் சென்றடையாதவர்கள், இந்த <>லிங்க் <<>>மூலம் குறைகளைப் பதிவு செய்யலாம். இந்தத் தளத்தில், முதலமைச்சர் வீடியோ/ஆடியோ அழைப்புகள் மூலமாகவும், உயர் அதிகாரிகள் தொலைபேசி மூலமாகவும் நேரடியாக தொடர்புகொள்ளலாம். முதலமைச்சரின் நேரடிப் பார்வையில் குறைகள் உடனடியாக நிவர்த்தி செய்யப்படும். ஷேர்

Similar News

News October 15, 2025

கள்ளக்குறிச்சி: வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை

image

தென்கீரனூரைச் சேர்ந்த தேன்மொழி, இன்று மற்றொரு வீட்டிற்குச் சென்று திரும்பியபோது, வீட்டின் முன்பக்கக் கதவு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டில் இருந்த இரும்புப் பீரோவை உடைத்து, மர்ம நபர்கள் 11 கிராம் தங்கம், 450 கிராம் வெள்ளி மற்றும் ரூ. 66 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றைத் திருடிச் சென்றதாக அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News October 14, 2025

கள்ளக்குறிச்சி: மருத்துவமனையில் சிகிச்சை சரியில்லையா?

image

கள்ளக்குறிச்சி மக்களே, அரசு மருத்துவமனைகளை நம்பி தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை சரி இல்லை என்றாலோ, பணியாளர்கள் சரியாக நடந்துகொள்ளவில்லை என்றாலோ பொதுமக்கள் TOLL FREE 104 எண்ணில் அல்லது உங்க மாவட்ட சுகாதார அலுவலகத்தில் (04151-222190) புகார் செய்யலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News October 14, 2025

கள்ளக்குறிச்சி: ஆற்றில் மூழ்கிய சிறுவன்.. ரூ.3 லட்சம் நிவாரணம்!

image

திருவெண்ணெய்நல்லூரை சேர்ந்த 16 வயது சிறுவன் எத்திராஜ், ஆதிதிருவரங்கம் அரங்கநாதர் கோயில் அருகே உள்ள தென்பெண்ணை ஆற்றில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்தபோது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். இவர் ஆவியூரில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த நிலையில் உயிரிழந்த சிறுவனின் பெற்றோருக்கு தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து 3 லட்ச ரூபாய் வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் நேற்று உத்தரவிட்டுள்ளார்.

error: Content is protected !!