News October 14, 2025
டாஸ்மாக் வழக்கு: ED-க்கு சுப்ரீம் கோர்ட் சரமாரி கேள்வி

டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது. சிபிஐ கூட சோதனை செய்யும் முன்பு சம்பந்தப்பட்ட அரசிடம் தகவல் சொல்கிறது என குறிப்பிட்ட SC, ஒரு வழக்கில் உரிய விசாரணை நடக்கவில்லை என சந்தேகம் எழுந்தால், அதில் உடனடியாக ED தலையிடுமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், 3 நாள் சோதனையில் TASMAC அதிகாரிகள் அடைத்து வைக்கப்பட்டனரா எனவும் அமலாக்கத்துறையிடம் SC கேட்டுள்ளது.
Similar News
News October 14, 2025
₹2,000 நோட்டுகள்.. ரிசர்வ் வங்கி முக்கிய தகவல்

தீபாவளிக்கு வீட்டை சுத்தம் செய்தபோது, <<17996227>>₹2,000 நோட்டுகள்<<>> கிடைத்த செய்தி வைரலாகி வருகிறது. இந்நிலையில், ₹5,884 கோடி ₹2,000 நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்பவில்லை என RBI தெரிவித்தது கவனம் பெற்றுள்ளது. உங்களிடம் ₹2,000 நோட்டு இருந்தால் RBI சென்னை அலுவலகத்தில் கொடுத்து மாற்றலாம். அடையாள அட்டை உள்ளிட்டவற்றுடன் சென்று பணத்தை டெபாசிட் செய்யலாம். தபால் நிலையம் மூலமும் RBI-க்கு ₹2000 நோட்டுகளை அனுப்பலாம்.
News October 14, 2025
உங்களுக்கு தீபாவளி பரிசு கிடைச்சுதா?

GST-யில் மாற்றம் செய்து தீபாவளி பரிசு என அறிவித்த PM மோடி, இந்த வரிக் குறைப்பால் மக்களுக்கு பணம் மிச்சமாகும் எனக் கூறியிருந்தார். தீபாவளிக்கு இன்னும் சில நாள்களே உள்ள நிலையில், பெரும்பாலானோர் புத்தாடை, பட்டாசு, வீட்டு உபயோகப் பொருள்கள், எலக்ட்ரானிக் சாதனங்களை வாங்கியிருப்பீர்கள். வரிக் குறைப்பால், இந்த தீபாவளி ஷாப்பிங்கில் உங்க கிட்ட எவ்வளவு பணம் மிச்சமாச்சு? கமெண்ட்டில் சொல்லுங்க.
News October 14, 2025
டிராவில் முடிந்த இந்தியா – பாகிஸ்தான் போட்டி

மலேசியாவில் நடைபெற்று வரும் சுல்தான் ஆஃப் ஜோகூர் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்திய பாகிஸ்தான் அணிகள் மோதின. முதலில் 0-2 என்று பின்தங்கி இருந்த இந்தியா பின்னர் சுதாரித்துக்கொண்டு அடுத்தடுத்து கோல்களை அடித்தது. இதனால் 3-2 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையும் பெற்றது. ஆனால் கடைசி நேரத்தில் பாகிஸ்தான் மேலும் ஒரு கோலை அடித்து சமன் செய்தது. புள்ளி பட்டியலில் இந்தியா தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது.