News October 14, 2025

நெல்லை தேர்தல் பிரிவிற்கு புதிய தாசில்தார்

image

நெல்லை மாவட்டத்தில் வருவாய் துறையில் தாசில்தார், 7 துணை தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்து கலெக்டர் சுகுமார் உத்தரவிட்டுள்ளார். தேர்தல் பிரிவு தனி தாசில்தார் பாலமுருகன் நில எடுப்பு தனி தாசில்தாராக மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதில் மறுக்கால் குறிச்சி சிப்காட் தொழில் பூங்கா, நில எடுப்பு தனி தாசில்தார் முருகன் தேர்தல் பிரிவு புதிய தாசில்தாராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Similar News

News October 14, 2025

நெல்லை: மாலை 4 மணி வரை மழைப்பதிவு விபரம்

image

இன்று அக்டோபர் 14 காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை நெல்லை மாவட்டத்தில் பெய்த மழை விபரம் மாவட்ட நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சேரன்மகா தேவியின் 21 மில்லிமிட்டர் மழை பெய்தது. அம்பாசமுத்திரம் 8 மில்லி மீட்டர் பாளையங்கோட்டை 7 மில்லி மீட்டர், மணிமுத்தாறு, நாங்குநேரி தலா 2 மில்லி மீட்டர், நெல்லை 3. 40 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

News October 14, 2025

நெல்லை: உங்க இடம் நீளம், அகலம் தெரியலையா??

image

நெல்லை மக்களே, உங்கள் வீடு/நிலத்திற்கு தெளிவான வரைபடம் (FMP) இல்லையா? இடம் நீளம், அகலம் தெரியாமா கவலையா? இனிமேல் அவசியமில்லை! இங்கு <>க்ளிக்<<>> செய்து “Size”ன்னு இருப்பதில் A4-இல் இருந்து AO-வாக மாற்றி சமர்ப்பியுங்கள். உங்க நிலத்தின் துல்லியமான FMP வரைபடம் கிடைக்கும். இனி உங்க இடம் நீளம், அகலம் துள்ளியமா இருக்கும். மற்றவர்களுக்கும் தெரிய SHARE செய்யுங்க!

News October 14, 2025

நெல்லை: கரூர் விவகாரம் – நயினார் நாகேந்திரன் அறிக்கை

image

கரூர் சம்பவத்தில் தங்கள் மீது எந்தவித தவறும் இல்லை என்பதை நிறுவ எதிர் தரப்பினரை குற்றவாளி கூண்டில் நிறுத்தி தங்கள் இஷ்டத்துக்கு கட்டுக்கதைகளை புனைந்து வந்தது திமுக அரசு. இந்த அவசரத்திற்கு பின்னால் ஏதோ ஒரு அருவருப்பான அரசியல் காரணம் ஒளிந்து இருக்கிறது என்ற மக்களின் சந்தேகத்திற்கு கூடிய விரைவில் விடை கிடைக்கப் போகிறது. அப்பாவி பொதுமக்களை காவு வாங்கிய கயவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என நயினார் அறிக்கை.

error: Content is protected !!