News October 14, 2025

விவசாயிகளுக்கு அடையாள அட்டை அவசியம்!

image

மத்திய அரசு வழங்கும் ரூ.2 ஆயிரம் உதவித் தொகையைப் பெற தனித்துவ விவசாய அடையாள அட்டை அவசியம் என வேளாண்மை இணை இயக்குநர் அ.பாண்டியன் தெரிவித்தார். திண்டுக்கல் மாவட்டத்தில் 75 ஆயிரம் விவசாயிகளில் 16,539 பேர் இதுவரை அட்டை பெறவில்லை. அக்டோபர் இறுதி அல்லது நவம்பர் தொடக்கத்தில் வழங்கப்படும் 21வது தவணைத் தொகை பெற, ஆதார், கைப்பேசி எண், சிட்டா நகலுடன் உடனே அட்டை பெற வேண்டும் என கூறினார்.

Similar News

News October 14, 2025

திண்டுக்கல்: தவெக நிர்வாகிக்கு ஜாமீன்!

image

திண்டுக்கல்: தவெக தெற்கு மாவட்ட செயலாளர் நிர்மல்குமார், முதலமைச்சர் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி குறித்த சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பியதாக கடந்த 2 நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். 3 நீதிமன்ற நீதிபதி ஆனந்தி அக்டோபர் 24 வரை காவலில் வைக்க உத்தரவிட்டார். இன்று(அக்.14) நிர்மல்குமாருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது.

News October 14, 2025

திண்டுக்கல் :ஊராட்சி செயலாளர் பணி அட்டவணை வெளியீடு

image

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பட்டதாரிகள் இளைஞர்கள் கவனத்திற்கு தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பில் ஊராட்சி செயலாளர்கள் பணியிடத்திற்கான மாவட்ட வாரியாக காலி பணியிடங்கள் மற்றும் மாவட்டத்தில் உள்ள வகுப்புவாரியான பணியிட இட ஒதுக்கீடுகளை தமிழ்நாடு அரசு அட்டவணை வெளியிட்டுள்ளது.

News October 14, 2025

நத்தம்: கோயிலில் அம்மன் நகை திருட்டு!

image

நத்தம்: கோவில்பட்டியில் செண்பகவல்லி அம்மன் கோயிலில் தினமும் காலை, மாலை  நடைதிறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். இந்நிலையில் கடந்த 9ஆம் தேதி மாலை வழக்கம்போல் கோயில் திறக்கப்பட்டு பூஜைகள் நடந்தன. இந்நிலையில், மறுநாள் காலை கோவிலை திறந்த போது செண்பகவல்லி அம்மன் கழுத்தில் இருந்த தாலி திருடு போயிருந்தது. இது குறித்த புகாரில் நத்தம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

error: Content is protected !!