News October 14, 2025
திருச்சி: ரயில் முன் பாய்ந்து தற்கொலை

வையம்பட்டி அடுத்த தண்டல்காரனூர் அருகே நேற்று இரவு இடையபட்டியைச் சேர்ந்த கஸ்தூரி ராஜா என்ற இளைஞர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். ஆன்லைன் கேம் மூலமாக ஏற்பட்ட பண இழப்பின் காரணமாகவே தான் தற்கொலை செய்து கொள்ள போவதாகவும் அவர் வாட்ஸ்அப்பில் பகிர்ந்துள்ளார். அதன் அடிப்படையில் ரயில்வே போலீசார் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News October 14, 2025
திருச்சி: ரூ.52,000 மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்

திருவெறும்பூர் காவல் நிலைய எஸ்எஸ்ஐ தனலட்சுமி தலைமையிலான குழுவினர், நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஹரி பாஸ்கர் குடியிருப்பு பகுதியில் செல்வி, ரேவதி, கோபால் ஆகிய மூன்று பேர் கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் மூன்று பேரையும் போலீசார் கைது செய்து ரூ.52,000 மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
News October 14, 2025
திருச்சி: ரூ.52,000 மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்

திருவெறும்பூர் காவல் நிலைய எஸ்எஸ்ஐ தனலட்சுமி தலைமையிலான குழுவினர், நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஹரி பாஸ்கர் குடியிருப்பு பகுதியில் செல்வி, ரேவதி, கோபால் ஆகிய மூன்று பேர் கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் மூன்று பேரையும் போலீசார் கைது செய்து ரூ.52,000 மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
News October 14, 2025
திருச்சி: ரேஷன்கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு!

ரேஷன் கார்டுகளில் மாற்றம் செய்ய போறீங்களா? தமிழக அரசு ரேஷன் கார்டுகளுக்கு கொண்டு வந்துள்ள புதிய நடைமுறைகள் இதோ: நபர்கள் சேர்த்தல், பெயர் நீக்குதல், முகவரி மாற்றம், கார்டு மீண்டும் பிரிண்ட் செய்தல் போன்றவைகளை வருடத்திற்கு 2 முறை மட்டுமே ஆன்லைனில் செய்ய முடியும். எனவே மாற்றம் செய்யும் போது ஆவணங்களை சரிபார்த்து சரியா பண்ணுங்க.. ரேஷன் அட்டைகளில் மாற்றம் செய்ய <