News October 14, 2025
மயிலாடுதுறை: உரம் தட்டுப்பாட்டால் வேதனை

சீர்காழி தாலுகாவில் 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் சம்பா சாகுபடி பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சீர்காழி பகுதியில் உள்ள தனியார் உர கடைகள் மற்றும் அரசு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் போதிய அளவு யூரியா இல்லாததால் நடவு பணி பாதிப்படைந்து வருகிறது. உரிய நேரத்தில் நடவு செய்யவில்லை என்றால் அறுவடை நேரத்தில் மழையில் நெல்மணிகள் பாதிக்கும் என விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்
Similar News
News October 14, 2025
மயிலாடுதுறை: இதுவரை 34919 மனுக்களுக்கு தீர்வு

மயிலாடுதுறை மாவட்டத்தில் இதுவரை 129 உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் நடத்தப்பட்டு, பொதுமக்களிடமிருந்து 58,620 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளது. அதில் 34, 919 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளது. மீதமுள்ள மனுக்களுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இன்று 130வது முகாம் மயிலாடுதுறை வட்டம் ஆத்தூர் கிராமத்திலும் தரங்கம்பாடி வட்டம் செம்பனார்கோவிலிலும் நடைபெற்றது.
News October 14, 2025
மயிலாடுதுறை: ரேஷன்கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு!

ரேஷன் கார்டுகளில் மாற்றம் செய்ய போறீங்களா? தமிழக அரசு ரேஷன் கார்டுகளுக்கு கொண்டு வந்துள்ள புதிய நடைமுறைகள் இதோ: நபர்கள் சேர்த்தல், பெயர் நீக்குதல், முகவரி மாற்றம், கார்டு மீண்டும் பிரிண்ட் செய்தல் போன்றவைகளை வருடத்திற்கு 2 முறை மட்டுமே ஆன்லைனில் செய்ய முடியும். எனவே மாற்றம் செய்யும் போது ஆவணங்களை சரிபார்த்து சரியா பண்ணுங்க.. ரேஷன் அட்டைகளில் மாற்றம் <
News October 14, 2025
மயிலாடுதுறை: 27 ஜோடிகளுக்கு இலவச திருமணம்

தருமபுரம் ஆதீனம் 27ஆவது குருமகா சன்னிதானம் மணி விழா நிகழ்வை முன்னிட்டு 27 இளையோருக்கு திருமணம் செய்து வைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. வருகிற 9.11.2025 அன்று திருமணங்கள் நடைபெற உள்ளது. இதில் மணமக்களுக்கு பவுன் தாலி, வஸ்திரம், சீர் வரிசைகள் வழங்கப்படவுள்ளது. இதற்கு பெற்றோர்கள் நேரில் வந்து திருமடத்தில் விண்ணப்பத்தினை பெற்று 30 நாட்களுக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.