News October 14, 2025

செங்கல்பட்டு: கல்லூரி மாணவன் விடுதியில் தற்கொலை

image

திருப்பத்தூரை சேர்ந்தவர் மாவோ (20). சேலையூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இந்நிலையில் இவரின் தந்தைக்கு உடல் நிலை சரியில்லாததால் இவரால் படிப்பை தொடர முடியவில்லை. எனவே கல்லூரிக்கு செலுத்திய கட்டணததை திரும்ப கேட்டுள்ளார். கல்லூரி நிர்வாகம் முறையான பதில் அளிக்காததால் மன உளைச்சலில் இருந்தவர் கல்லூரி விடுதியில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் பெரும் சோகம் செற்பட்டுள்ளது.

Similar News

News October 14, 2025

செங்கல்பட்டு: விபத்தில் 6 வயது சிறுவன் உயிரிழப்பு

image

(அக்.13) சுரேஷ் (48) என்பவர் காரில் பையனூரில் இருந்து திருப்போரூருக்கு சென்று கொண்டிருந்தார். ஆலத்தூர் பேருந்து நிலையம் அருகே உள்ள பெட்ரோல் பங்கில் இருந்து வலதுபுறம் திரும்பிய போது பின்னால் வந்த கார் மோதியது. இதில் காரில் இருந்த ஏர் பேக் திறந்து முடியதில் காரில் முன்னாள் இருந்த கவின் (6) என்ற சிறுவன் மூச்சு திணறி உயிரிழந்தார். திருப்போரூர் போலீசார் விசாரிக்கின்றனர்‌.

News October 14, 2025

செங்கல்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை சரியில்லையா?

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளை நம்பி தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை சரி இல்லை என்றாலோ, பணியாளர்கள் சரியாக நடந்துகொள்ளவில்லை என்றாலோ பொதுமக்கள் TOLL FREE 104 எண்ணில் அல்லது உங்க மாவட்ட சுகாதார அலுவலகத்தில் புகார் செய்யலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News October 14, 2025

செங்கல்பட்டில் மழை வெளுக்கும்!

image

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய கடலோரப் பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டத்திலும் புதுச்சேரியின் ஒரு சில இடங்களிலும் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, செங்கல்பட்டு மாவட்டத்தில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் வானிலை எப்படி உள்ளது என கமெண்ட் பண்ணுங்க.

error: Content is protected !!