News October 14, 2025

தஞ்சை: 800 கேமராக்கள் மூலம் கண்காணிப்பு

image

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தஞ்சாவூர் காந்திஜி சாலையில் ராஜப்பா பூங்கா அருகே காவல் உதவி மையத்தைத் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இரா. இராஜாராம் திறந்து வைத்தார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில் இந்த மையம் மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்காக அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தஞ்சை மாநகரில் அனைத்து பகுதிகளிலும் 800 கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது என்று தெரிவித்தார்.

Similar News

News October 14, 2025

தஞ்சாவூர்: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

ரேஷன் கார்டுகளில் மாற்றம் செய்ய போறீங்களா? தமிழக அரசு ரேஷன் கார்டுகளுக்கு கொண்டு வந்துள்ள புதிய நடைமுறைகள் இதோ: நபர்கள் சேர்த்தல், பெயர் நீக்குதல், முகவரி மாற்றம், கார்டு மீண்டும் பிரிண்ட் செய்தல் போன்றவைகளை வருடத்திற்கு 2 முறை மட்டுமே ஆன்லைனில் செய்ய முடியும். எனவே மாற்றம் செய்யும் போது ஆவணங்களை சரிபார்த்து சரியா பண்ணுங்க.. ரேஷன் அட்டைகளில் மாற்றம் செய்ய<> க்ளிக்<<>> செய்யவும். இதனை SHARE பண்ணுங்க!

News October 14, 2025

தஞ்சை: 500 மரக்கன்றுகளை நட்டு வைத்த மாணவர்கள்

image

பெருமகளூர் அரசினர் மேல்நிலை பள்ளியில், தஞ்சை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மாதவன் அவர்களின் வழிகாட்டுதலின்படி தஞ்சாவூர் மாவட்ட ஜூனியர் ரெட் கிராஸ் மற்றும் பேராவூரணி ஸ்டார் லயன்ஸ் சங்கம் ஆகியவை இணைந்து நேற்று குறுங்காடுகள் அமைக்கப்பட்டது. விழாவில், ஆசிரியர்களுடன் இணைந்து மாணவர்கள் 500 மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். இந்த நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியை தங்கமணி முன்னிலை வகித்தார்.

News October 14, 2025

தஞ்சை: பிணமாக கரை ஒதுங்கிய வாலிபர் உடல்!

image

கும்பகோணம் அருகே காவிரி ஆற்றில் தவறி விழுந்த தனியார் நிறுவன ஊழியரான பாரதி (24) என்பவரின் சடலம் நேற்று திங்கள்கிழமை மாலை மீட்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை இரவு ஆற்றில் மூழ்கிய அவரை போலீஸார் மற்றும் தீயணைப்புத் துறையினர் தேடி வந்தனர். இந்நிலையில் படித்துறையில் சடலம் ஒதுங்கிய நிலையில், போலீஸார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!