News October 14, 2025
பள்ளிபாளையம்: மாணவ, மாணவிகளுக்கான கல்வி கடன் முகாம்!

பள்ளிபாளையம் வட்டாரத்திலுள்ள எலந்தக்குட்டை, காடச்சநல்லூர், களியனூர், கொக்கராயன்பேட்டை, குப்பாண்ட பாளையம், ஓடப்பள்ளி, பாதரை, பல்லக்காபாளையம், சௌதாபுரம், தட்டான்குட்டை, படவீடு, ஆலாம்பாளையம் உள்ளிட்ட ஊராட்சி/நகராட்சி/பேரூராட்சி அலுவலகங்களில் கல்வி கடன் முகாம் அக்.16ந் தேதி காலை 09 முதல் 01 மணி வரை நடைபெறவுள்ளது. கல்வி கடன் தேவைப்படும் பள்ளிபாளையத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்துக் கொண்டு பயன்பெறலாம்.
Similar News
News October 14, 2025
திருச்செங்கோடு: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டு செப்டம்பரில் வடமாநில ஏடிஎம் கொள்ளையர்களை சினிமா பாணியில் சேஸ் செய்து போலீசார் பிடித்தனர். இந்நிலையில், சம்பவத்தின் போது கைதிகளில் ஒருவர் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட நிலையில், வழக்கில் பிடிபட்ட இருவருக்கு தலா
12 ஆண்டுகள் சிறை தண்டனையும் எஞ்சிய 4 பேருக்கு தலா 24 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து திருச்செங்கோடு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
News October 14, 2025
நாமக்கல்: வீடு கட்ட ரூ.2.10 லட்சம் – சூப்பர் ஆஃபர்!

முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் பற்றி தெரியுமா? வீடு இல்லமால் தவிக்கும் குடும்பங்களுக்கு இலவசமாக 300 சதுரடியில் ரூ.2.10 லட்சம் மதிப்பில் மழை நீர் சேகரிப்பு வசதி, 5 சூரிய சக்தியால் இயங்கும் CF விளக்கு வசதியுடன் வீடு கட்டி தரப்படும். இந்த திட்டத்தில் நீங்களும் பயனடைய வேண்டுமா? உங்கள் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் வீடு கட்டும் கனவு நிறைவேறும். SHARE பண்ணுங்க!
News October 14, 2025
நாமக்கல்: பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கவனத்திற்கு!

நாமக்கல் அரசு ஆண்கள் (தெற்கு) மேல்நிலை பள்ளியில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மாவட்ட அளவிலான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடைபெறுகிறது. அதன்படி, அக்.14ந் தேதி அரசு/தனியார் பள்ளி 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கும், அக்.15ந் தேதி அரசு/தனியார் கல்லூரி மாணவர்களுக்கும் காலை 09.30 மணியளவில் போட்டிகள் நடைபெறுகிறது. போட்டி தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 04286292164 என்ற எண்ணைத் தொடர்புக் கொள்ளவும்.