News October 14, 2025

கடலூர் எஸ்.பி கடும் எச்சரிக்கை

image

பரிசமங்கலம் கிராமத்தில் பிச்சம்மாள் என்பவரின் இறுதி ஊர்வலத்தில் வான வெடி வெடித்ததை தொடர்ந்து, நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவத்தை மிகைப்படுத்தி இரு சமுதாயங்களுக்கு இடையே வன்முறையை தூண்டும் வகையில் சிலர் செய்திகளை பரப்பி வருகின்றனர். இதுபோல தவறான செய்திகள் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி எச்சரித்துள்ளார்.

Similar News

News October 14, 2025

கடலூர்: ரேஷன்கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

ரேஷன் கார்டுகளில் மாற்றம் செய்ய போறீங்களா? தமிழக அரசு ரேஷன் கார்டுகளுக்கு கொண்டு வந்துள்ள புதிய நடைமுறைகள் இதோ: நபர்கள் சேர்த்தல், பெயர் நீக்குதல், முகவரி மாற்றம், கார்டு மீண்டும் பிரிண்ட் செய்தல் போன்றவைகளை வருடத்திற்கு 2 முறை மட்டுமே ஆன்லைனில் செய்ய முடியும். எனவே மாற்றம் செய்யும் போது ஆவணங்களை சரிபார்த்து சரியா பண்ணுங்க.. ரேஷன் அட்டைகளில் மாற்றம் செய்ய<> க்ளிக் செய்யவும்<<>>. இதனை SHARE பண்ணுங்க.!

News October 14, 2025

கடலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

கடலூர் மாவட்​டத்​தில், பெண் குழந்​தைகளின் சமூக முன்​னேற்​றத்​துக்​காக, சிறப்​பாக பங்​காற்​றிய 13-18 வயதுக்குட்​பட்ட பெண் குழந்​தைகளுக்கு ஆண்டுதோறும் மாநில அரசின் சார்​பில், விருது மற்​றும் ரூ.1 லட்​சத்​துக்​கான காசோலை வழங்​கப்​பட்டு வருகிறது. விருதுக்கு விண்​ணப்​பிக்க http://awards.tn.gov.in என்ற இணை​யதளத்​தில் வரும் நவ. 29-க்​குள் விண்​ணப்​பிக்க வேண்​டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

News October 14, 2025

கடலூர்: தண்டவாளத்தில் தலை இல்லாமல் கிடந்த உடல்

image

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் ரயில் நிலையத்திற்கும், மணிமுத்தாறு மேம்பாலத்திற்கும் இடையே நேற்று இரவு தண்டவளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் இளைஞர் ஒருவரின் உடல் கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!