News October 14, 2025

திருவாரூர்: தீபாவளிக்கு பலகாரம் வாங்க போறீங்களா?

image

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் சூழலில், நாம் பலரும் பேக்கரி மற்றும் உணவகங்களில் இனிப்பு உணவு வகைகளை வாங்குவது வழக்கம். இந்நிலையில் அப்படி வாங்கப்படும் பொருட்கள் தரமில்லாமல் இருந்தால் என்ன செய்வதென்று பலருக்கும் தெரியாது. இதுபோன்ற சூழல் உங்களுக்கு ஏற்பட்டால் ‘94440 42322’ என்ற வாட்ஸ்அப் எண்ணின் வாயிலாக தமிழக உணவுப் பாதுகாப்பு துறையிடம் உங்களால் வீட்டிலிருந்தே புகார் அளிக்க முடியும். ஷேர் பண்ணுங்க!

Similar News

News October 14, 2025

திருவாரூர்: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

ரேஷன் கார்டுகளில் மாற்றம் செய்ய போறீங்களா? தமிழக அரசு ரேஷன் கார்டுகளுக்கு கொண்டு வந்துள்ள புதிய நடைமுறைகள் இதோ: நபர்கள் சேர்த்தல், பெயர் நீக்குதல், முகவரி மாற்றம், கார்டு மீண்டும் பிரிண்ட் செய்தல் போன்றவைகளை வருடத்திற்கு 2 முறை மட்டுமே ஆன்லைனில் செய்ய முடியும். எனவே மாற்றம் செய்யும் போது ஆவணங்களை சரிபார்த்து சரியா பண்ணுங்க.. ரேஷன் அட்டைகளில் மாற்றம் செய்ய <>க்ளிக் <<>>செய்யவும். இதனை SHARE பண்ணுங்க!

News October 14, 2025

திருவாரூர்: இளைஞர்களுக்கு உதவித் தொகை!

image

திருவாரூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு, +2, பட்டப்படிப்பு முடித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 வருடங்கள் ஆகியுள்ள வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்கள் உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம். விளமலில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுகி வரும் நவம்பர் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று ஆட்சியர் மோகனச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

News October 14, 2025

திருவாரூர்: 17 வயது சிறுமிக்கு கருக்கலைப்பு!

image

முத்துப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை சித்தமல்லி கிராமத்தைச் சேர்ந்த நிதிஷ்குமார் (20) என்பவர் ஆசை வார்த்தை கூறி சிறுமியை அதே பகுதியில் உள்ள முருகன் கோயிலில் தாலி கட்டி திருமணம் செய்துள்ளார். இந்த நிலையில் அந்த சிறுமி கற்பமாக்கி, பின்னர் அக்கருவை கலைத்துள்ளனர் என கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்த முத்துப்பேட்டை மகளிர் போலீசார், சிறுமியை மீட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

error: Content is protected !!