News October 14, 2025
மதுரையில் ஜிம் மாஸ்டர் இறப்பு

அய்யர்பங்களாவைச் சேர்ந்தவர் அன்புசெல்வம் 37. ஜிம் மாஸ்டரான இவர், பெற்றோரை பிரிந்து நண்பர் வீட்டில் வாழ்ந்து வந்தார். அக்.4ல் ரத்தம் உறைதல் ஏற்பட்டு பக்கவாத பாதிப்பால் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அக்.11ல் இறந்தார். பெற்றோர் எங்குள்ளனர் எனத் தெரியாததால் உடலை ஒப்படைப்பதில் போலீசாருக்கு சிக்கல் நீடிக்கிறது. விபரம் அறிந்தவர்கள் திருப்பாலை இன்ஸ்பெக்டருக்கு 82488 28080 ல் தகவல் தெரிவிக்கலாம்.
Similar News
News October 14, 2025
மதுரையில் 4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மதுரை, தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தேனியில் இன்று (அக்.14) முதல் அக். 20 வரை 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என கூறியுள்ளது. இந்த பயனுள்ள தகவலை ஷேர் பண்ணுங்க.
News October 14, 2025
மேலூர் அருகே மின்சாரம் தாக்கி கூலித் தொழிலாளி பலி

மதுரை மாவட்டம் மேலுார் அருகே கருத்தபுளியம்பட்டியைச் சேர்ந்த அர்ஜுன் (21) என்பவர், கல்லம்பட்டியில் வீட்டு வேலை செய்யும் போது, மின்சார வயரில் கம்பி அறுந்ததில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் நேற்று (அக். 13) மதியம் நிகழ்ந்தது. மேலுார் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News October 14, 2025
மதுரையில் வீட்டிற்குள் அழுகிய நிலையில் சடலம் மீட்பு

மதுரை கீழவெளிவீதி சாயப்பட்டறை கூலித் தொழிலாளி பழனி 60 வண்டியூர் பகுதியில் வசித்து வந்தார். சில நாட்களாக அவர் வேலைக்கு வராததால் சாயப்பட்டறை தொழிலாளர்கள் நேற்று அவர் வீட்டிற்கு சென்றனர். வீட்டிற்குள் துர்நாற்றம் வீசியதால் வண்டியூர் விஏஓவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது புகாரின் பேரில் போலீசார் வீட்டின் கதையை உடைத்து பார்த்த போது பழனி அழுகிய நிலையில் இறந்து கிடந்தார் போலீசார் விசாரிக்கின்றனர்.