News October 14, 2025
திருச்சி விவசாயிகள் குறைதீர் கூட்டம் அறிவிப்பு

திருச்சி மாவட்ட விவசாயிகளுக்கான அக்டோபர் மாத குறைதீர் கூட்டம் வரும் 17ஆம் தேதி காலை 10:30 மணி அளவில், ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு நீர் பாசனம், வேளாண்மை சம்பந்தப்பட்ட கடனுதவிகள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்து கோரிக்கை மனு வழங்கலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
Similar News
News October 14, 2025
திருச்சி: பள்ளத்தில் ஆட்டோ கவிழ்ந்து சிறுமி பலி

திருச்சி, மண்ணச்சநல்லூர் அருகே தில்லாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் நேற்று புதிதாக வாங்கிய ஆட்டோவில் தனது மகள் கிரேசிக்காவை (10) அழைத்துக்கொண்டு சென்றுக்கொண்டிருந்தார். அப்போது சாலையோர பள்ளத்தில் ஆட்டோ கவிழ்ந்து சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் ராஜ்குமார் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
News October 14, 2025
திருச்சி: ரயில் முன் பாய்ந்து தற்கொலை

வையம்பட்டி அடுத்த தண்டல்காரனூர் அருகே நேற்று இரவு இடையபட்டியைச் சேர்ந்த கஸ்தூரி ராஜா என்ற இளைஞர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். ஆன்லைன் கேம் மூலமாக ஏற்பட்ட பண இழப்பின் காரணமாகவே தான் தற்கொலை செய்து கொள்ள போவதாகவும் அவர் வாட்ஸ்அப்பில் பகிர்ந்துள்ளார். அதன் அடிப்படையில் ரயில்வே போலீசார் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
News October 14, 2025
திருச்சி: புகையிலையின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு முகாம்

திருச்சி மாவட்டத்தில், “புகையிலை இல்லா இளைய சமுதாயம்” என்ற தலைப்பிலான விழிப்புணர்வு முகாம் கடந்த 9-ம் தேதி தொடங்கி டிச.8-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் புகையிலையின் தீமைகள் குறித்து ஒவ்வொரு கிராமத்திலும் வாரத்தில் ஒரு நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. மேலும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் வாரம் இருமுறை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளதாக ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.