News October 14, 2025
தென்காசி: தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்க்கை அறிவிப்பு

வீரகேரளம்புதூர் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 2025-ம் கல்வி ஆண்டிற்கான நேரடி மாணவர் சேர்க்கை இணையதளம் வாயிலாக (https://skilltraining.tn.gov.in) 30.09.2025 வரை நடைபெற்றது. தற்பொழுது மாணவர்களின் நலன் கருதி 17.10.2025 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.வீரகேரளம்புதூர் – 04633-277962 ஆகிய தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்
Similar News
News October 14, 2025
தென்காசி: தேர்வு இல்லாமல் – அரசு வேலை வேணுமா?

தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தில் காலியாக உள்ள 1096 அலுவலக உதவியாளர், ஆலோசகர், சிறப்பு கல்வியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பப்படவுள்ளது. இதற்கு 10th,12th, UG/PG, B.E/B.Tech படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு தேர்வு கிடையாது குறுகிய பட்டியல் (Shortlisting) மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு இங்கே <
News October 14, 2025
குற்றாலம்: நாளை நடராஜமூர்த்தி கோயிலில் விசேஷம்

15.10.2025 நாளை புதன்கிழமை குற்றாலத்தில் ஸ்ரீ நடராஜமூர்த்திக்கு காலை 8 மணி அளவில் அபிஷேகமும் 09.30 மணி அளவில் தாண்டவ தீபாரதனையும் மாலை 5 மணி அளவில் அபிஷேகமும் இரவு 7 மணி அளவில் தாண்டவ தீபாராதனை இரவு 9:00 மணி அளவில் அபிஷேகமும் 09.30 மணி அளவில் வெள்ளை சாத்தி மற்றும் தாண்டவ தீபாராதனை நடைபெறும் பக்தர்கள் பங்கேற்க அழைப்பு
News October 14, 2025
தென்காசி: அக். 17 மிஸ் பண்ணிடாதீங்க

தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் அக்டோபர் 17ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் 20-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கின்றன. 8, 10, 12ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ தகுதி பெற்றவர்கள் பங்கேற்கலாம். பணியில் சேருபவர்களின் பதிவு மூப்பு பாதிக்கப்படாது. SHARE!