News October 14, 2025
மதுரை அருகே போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை

நீரேத்தான், மேட்டு நீரேத்தான் கிராமங்களுக்கு சொந்தமான ஆதி அய்யனார் கோயில் உள்ளது. கோயில் அறநிலையதுறை கட்டுப்பாட்டில் உள்ளதால் மரியாதை செய்வது தொடர்பாக இரு தரப்புகள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஒரு தரப்பினர் சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படும் விதமாக போஸ்டர் அடித்தனர். போஸ்டர் ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கிராமத்தினர் 200க்கு மேற்பட்டோர் நேற்று வாடிப்பட்டி போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர்
Similar News
News October 14, 2025
மேலூர் அருகே மின்சாரம் தாக்கி கூலித் தொழிலாளி பலி

மதுரை மாவட்டம் மேலுார் அருகே கருத்தபுளியம்பட்டியைச் சேர்ந்த அர்ஜுன் (21) என்பவர், கல்லம்பட்டியில் வீட்டு வேலை செய்யும் போது, மின்சார வயரில் கம்பி அறுந்ததில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் நேற்று (அக். 13) மதியம் நிகழ்ந்தது. மேலுார் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News October 14, 2025
மதுரையில் வீட்டிற்குள் அழுகிய நிலையில் சடலம் மீட்பு

மதுரை கீழவெளிவீதி சாயப்பட்டறை கூலித் தொழிலாளி பழனி 60 வண்டியூர் பகுதியில் வசித்து வந்தார். சில நாட்களாக அவர் வேலைக்கு வராததால் சாயப்பட்டறை தொழிலாளர்கள் நேற்று அவர் வீட்டிற்கு சென்றனர். வீட்டிற்குள் துர்நாற்றம் வீசியதால் வண்டியூர் விஏஓவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது புகாரின் பேரில் போலீசார் வீட்டின் கதையை உடைத்து பார்த்த போது பழனி அழுகிய நிலையில் இறந்து கிடந்தார் போலீசார் விசாரிக்கின்றனர்.
News October 14, 2025
மதுரை: VOTER ID வைத்திருப்போர் கவனத்திற்கு!

மதுரை மக்களே, 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் வாக்காளர் அட்டையில் உங்கள் பெயர், EPIC எண், பாலினம், முகவரி ஆகியவை சரியாக உள்ளதா என தெரிந்துகொள்ள அலுவலகங்களுக்கு இனி அலைய வேண்டாம்.<