News October 14, 2025
அரியலூர்: அரசு அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதில் மத்திய அரசு அறிவித்துள்ளபடி மூன்று சதவீத அகவிலைப்படி உயர்வை வழங்கிட வேண்டும் என கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Similar News
News October 14, 2025
அரியலூர்: மணல் எடுத்தால் கடும் நடவடிக்கை

அரியலூர் மாவட்டம், திருமானூரில் மணல் கடத்தல் சம்பவம் நடைபெறுகிறதா என போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திருமானூர் அருகே மணல் திருட்டில் ஈடுபட்ட ஒரு நபரின் மீது நேற்று வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் மணல் திருட்டில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
News October 14, 2025
அரியலூர்: தீபாவளிக்கு பலகாரம் வாங்க போறீங்களா?

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் சூழலில், நாம் பலரும் பேக்கரி மற்றும் உணவகங்களில் இனிப்பு உணவு வகைகளை வாங்குவது வழக்கம். இந்நிலையில் அப்படி வாங்கப்படும் பொருட்கள் தரமில்லாமல் இருந்தால் என்ன செய்வதென்று பலருக்கும் தெரியாது. இதுபோன்ற சூழல் உங்களுக்கு ஏற்பட்டால் ‘94440 42322’ என்ற வாட்ஸ்அப் எண்ணின் வாயிலாக தமிழக உணவுப் பாதுகாப்பு துறையிடம் உங்களால் வீட்டிலிருந்தே புகார் அளிக்க முடியும். ஷேர் பண்ணுங்க!
News October 14, 2025
அரியலூர் மாவட்டத்தில் 15 பேர் மீது வழக்கு

அரியலூர் மாவட்ட எஸ்பி அறிவுறுத்தலின் பேரில் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அதன்படி அரியலூர் மாவட்டத்தில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக 15 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, வாகனம் பறிமுதல் செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டது.