News October 14, 2025
புதுவை: பட்டப்பகலில் மூதாட்டியிடம் செயின் பறிப்பு

தவளக்குப்பம், ஆனந்தா நகரைச் சேர்ந்த மூதாட்டி எழிலரசி. இவர் நேற்று மதியம் அபிஷேகப்பாக்கம் சாலை வழியாக கடைக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது பின்னால் பைக்கில் வந்த மர்ம நபர், திடீரென எழிலரசி கழுத்தில் இருந்த, நான்கரை சவரன் தாலி செயினை பறித்துக்கொண்டு தப்பியுள்ளார். இச்சம்பவத்தில் மூதாட்டி எழிலரசி கீழே விழுந்து காயமடைந்துள்ளார். இதுகுறித்து தற்போது தவளக்குப்பம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News October 14, 2025
புதுச்சேரி: எம்எல்ஏ தலைமையில் ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர்கள் மீது நடந்த தாக்குதலை கண்டித்தும், மாணவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கை திரும்ப பெற வலியுறுத்தியும், பல்கலைக்கழக மானிய குழு 2015 பாலியல் புகார் மீது விசாரணை குழு அமைக்க வலியுறுத்தி உருளையன்பேட்டை எம்எல்ஏ நேரு தலைமையில் புதுவை பொதுநல அமைப்புகள் மற்றும் காரைக்கால் மக்கள் போராட்ட குழு சார்பாக இன்று (அக்.14) காலை 11 மணி அளவில் அண்ணா சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
News October 14, 2025
புதுவை: சுகாதார பணியாளர்கள் கூட்டுறவு கடன் சங்கம் முற்றுகை

புதுவை, விக்கோந் தே சுயிலாக் வீதியில் சுகாதார பணியாளர்கள் கூட்டுறவு கடன் சங்கம் இயங்குகிறது. இங்கு, உறுப்பினர்கள் வாங்கும் கடன்களுக்கு, தீபாவளியின் போது, லாபத்தின் அடிப்படையில் 3 முதல் 7 சதவீதம் வரை வட்டிக்கழிப்பு தொகை வழங்கப்பட்டது. இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக உறுப்பினர்களுக்கு வட்டிக்கழிப்பு தொகை வழங்கவில்லை. இதனை வழங்க வலியுறுத்தி சங்க உறுப்பினர்கள், சங்க அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர்.
News October 14, 2025
புதுச்சேரி: அரசு அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு!

புதுச்சேரியில் விளம்பரத்துறை இயக்குநர் முனிசாமிக்கு கூடுதலாக எழுதுபொருள் அச்சகத்துறை இயக்குநர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், காரைக்கால் உள்ளாட்சித் துறை துணை இயக்குநர் சுபாசுக்கு நகராட்சி ஆணையராகவும்; குடிமைப்பொருள் துணை இயக்குநர் சச்சிதானந்துக்கு காரைக்கால் கோயில் அதிகாரியாகவும் கூடுதல் பொறுப்பு ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை சார்பு செயலாளர் ஜெய்சங்கர் பிறப்பித்துள்ளார்.