News October 14, 2025
பெரம்பலூர்: தூய்மை பணியாளர்கள் திடீர் மயக்கம்!

பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள அறுவை சிகிச்சை அரங்கை சுத்தம் செய்து கொண்டிருந்த தூய்மை பணியாளர்கள் 11பேர் திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், பாதிக்கப்பட்ட தூய்மை பணியாளர்களின் உறவினர்கள் பலரும் அரசு மருத்துவமனையில் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இது குறித்து விசாரணை நடத்தப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.
Similar News
News October 14, 2025
பெரம்பலூர்: இலவச சட்ட உதவி வேண்டுமா?

பெரம்பலூர் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி ஆலோசனை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் போன்ற பல்வேறு வழக்குகளுக்கு வாதாட இலவசமாக வழக்கறிஞர் உதவியை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தகவலுக்கு பெரம்பலூர் மாவட்ட சட்ட ஆலோசனை மையத்தை (04328-296206) தொடர்பு கொள்ளலாம். இதை மறக்காமல் SHARE செய்யவும்!
News October 14, 2025
பெரம்பலூர்: சிலிண்டருக்கு அதிக பணம் கேட்குறாங்களா?

பெரம்பலூர் மக்களே உங்க வீட்டிற்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட கூடுதல் பணம் கேட்குறாங்களா? இனி கவலை வேண்டாம். ரசீதில் உள்ள விலையை விட அதிகமாக பணம் கேட்டால் 1800-2333555 என்ற எண்ணில் அல்லது <
News October 14, 2025
பெரம்பலூர்: அரசு பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு

பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரம் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகளிடம் பெண்குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்து பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர் 13.10.2025 விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் பெண்குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்தும், குழந்தை திருமணம் தடுப்பு, உள்ளிட்டவை குறித்து விரிவான விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.